sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த ஆறு பேர்

/

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த ஆறு பேர்

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த ஆறு பேர்

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த ஆறு பேர்


ADDED : செப் 21, 2024 11:19 PM

Google News

ADDED : செப் 21, 2024 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெஸ்காமில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, போலியான பணி நியமனக்கடிதம் கொடுத்து, மோசடி செய்த ஆறு பேர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.

பெங்களூரின் ஹலசூரு கேட் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் லிகித் கவுடா, 28. இவருக்கு 2021ல் விக்னேஷ் ஹெக்டே, 44, என்பவர் அறிமுகமானார். லிகித் கவுடா பெஸ்காம் மற்றும் கே.பி.டி.சி.எல்.,லில் வேலை தேடி வந்தார்.

இதை அறிந்த விக்னேஷ் ஹெக்டே, “எனக்கு அரசு உயர் அதிகாரிகள் தெரியும். அவர்கள் மூலமாக வேலை வாங்கித் தருகிறேன்,” என கூறினார். தன் கூட்டாளிகள் பிரவீன், 30, வெங்கடேஷ், 44, சிவானந்த், 63, சீனிவாஸ், 29, ராஜா, 42, ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின், “23 லட்சம் ரூபாய் கொடுத்தால் வேலை கிடைக்கும்,” என, ஆசை காண்பித்தார்.

இதை நம்பிய லிகித் கவுடா, 2023ல் பணம் கொடுத்தார். அதன்பின் போலியான பணி நியமனக்கடிதம் கொடுத்தனர். அது போலியானது என, தெரிந்து கொண்ட அவர், பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டார்.

பணத்தைக் கொடுக்காமல் அவர்கள் மிரட்டினர். இதுகுறித்து ஹலசூரு கேட் போலீஸ் நிலையத்தில், லிகித் கவுடா புகார் செய்தார். ஆறு பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us