sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குண்டு வெடித்து வீரர் உயிரிழப்பு

/

குண்டு வெடித்து வீரர் உயிரிழப்பு

குண்டு வெடித்து வீரர் உயிரிழப்பு

குண்டு வெடித்து வீரர் உயிரிழப்பு


ADDED : அக் 11, 2025 11:32 PM

Google News

ADDED : அக் 11, 2025 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாய்பாசா: ஜார்க்கண்டில் தடை செய்யப்பட்ட சி.பி.ஐ., மாவோயிஸ்ட் அமைப்பு கடந்த, 8ல் துவங்கி அக்.,15 வரை எதிர்ப்பு வாரம் கடைபிடிக்கிறது. இதையொட்டி மாநிலம் முழுதும் போலீசார் பாதுகாப்பை பலப் படுத்தியுள்ளனர்.

இதன் ஒருபகுதியாக 12 பட்டாலியான் சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள், ஆயுதப்படை போலீசாரின், 20 குழுக்கள் மற்றும் ரிசர்வ் போலீசார் நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, மேற்கு சிங்பும் மாவட்டத்தின் சரன்டா வனப்பகுதியில் இரு ஐ.இ.டி., எனப்படும், சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் நேற்று முன்தினம் வெடித்தன.

இதில் சிக்கி அசாமை சேர்ந்த சி.ஆர்.பி.எப்., தலைமை காவலர் மகேந்திர லஷ்கர் மற்றும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆகிய மூவர் காயம் அடைந்தனர்.

மகேந்திர லஷ்கர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us