ADDED : நவ 10, 2024 07:39 PM

புதுடில்லி: காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில், இன்று ராணுவ சுபேதார் ராகேஷ் குமார் வீர மரணம் அடைந்தார்.
இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் கிஷ்த்வார் மாவட்டத்தில், பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில், இன்று ராணுவ சுபேதார் வீர மரணம் அடைந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
வீர மரணம் அடைந்தவர் ராகேஷ் குமார் என தெரியவந்துள்ளது. இன்று காலை 11 மணியளவில் கேஷ்வன் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் 4 பேர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தவுடன் போலீஸ் பாதுகாப்பு குழுவினருடன் ராணுவத்தினரும் இணைந்து பதில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் 4 ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 3 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். பயங்கரவாதிகளுடன் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.