sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பொருளாதார பலத்தால் சில நாடுகள் அடாவடியில் ஈடுபடுகின்றன; யாரை சொல்கிறார் நிதின் கட்கரி!

/

பொருளாதார பலத்தால் சில நாடுகள் அடாவடியில் ஈடுபடுகின்றன; யாரை சொல்கிறார் நிதின் கட்கரி!

பொருளாதார பலத்தால் சில நாடுகள் அடாவடியில் ஈடுபடுகின்றன; யாரை சொல்கிறார் நிதின் கட்கரி!

பொருளாதார பலத்தால் சில நாடுகள் அடாவடியில் ஈடுபடுகின்றன; யாரை சொல்கிறார் நிதின் கட்கரி!

1


ADDED : ஆக 10, 2025 09:10 PM

Google News

1

ADDED : ஆக 10, 2025 09:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: தொழில்நுட்பத்தில் அடைந்துள்ள வளர்ச்சி மற்றும் பொருளாதார பலம் காரணமாகவே சில நாடுகள் சர்வதேச அளவில் அடாவடியில் ஈடுபடுகின்றனர் என மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிடமிருந்து இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வரிகளை எதிர்கொண்டு வருகிறது. இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் அதிக வரி விதிக்கப்படும் வர்த்தக கூட்டாளிகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இந்நிலையில், நாக்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில், நடந்த நிகழ்ச்சியில் நிதின் கட்கரி பேசியதாவது: இந்தியா ஏற்றுமதியை அதிகரிக்கவும், இறக்குமதியைக் குறைக்கவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுயசார்பை அடைய வேண்டும்.

தொழில்நுட்பத்தில் அடைந்துள்ள வளர்ச்சி மற்றும் பொருளாதார பலம் காரணமாகவே சில நாடுகள் சர்வதேச அளவில் அடாவடியில் ஈடுபடுகின்றனர். சிறந்த தொழில்நுட்பம் மற்றும் வளங்கள் நமக்குக் கிடைத்தால், நாம் யாரையும் மிரட்ட மாட்டோம், ஏனென்றால் உலக நலன் மிக முக்கியமானது என்பதை நமது கலாசாரம் நமக்குக் கற்பிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

யாரை சொல்கிறார்?

அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பை இந்தியா எதிர்கொள்ளும் நேரத்தில், சில நாடுகள் சர்வதேச அளவில் அடாவடி செய்வதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடுமையாக சாடி பேசி உள்ளார்.






      Dinamalar
      Follow us