sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

யுனெஸ்கோ பட்டியலில் சோன்பத்ரா சால்கான் பூங்கா சேர்ப்பு

/

யுனெஸ்கோ பட்டியலில் சோன்பத்ரா சால்கான் பூங்கா சேர்ப்பு

யுனெஸ்கோ பட்டியலில் சோன்பத்ரா சால்கான் பூங்கா சேர்ப்பு

யுனெஸ்கோ பட்டியலில் சோன்பத்ரா சால்கான் பூங்கா சேர்ப்பு

1


ADDED : ஜூன் 22, 2025 08:21 PM

Google News

ADDED : ஜூன் 22, 2025 08:21 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 140 கோடி ஆண்டுகள் பழமையான உ.பி.,யின் சோன்பத்ராவின் சல்கான் பூங்கா, யுனெஸ்கோவின் தற்காலிக உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

சல்கான் புதைபடிவ பூங்கா, சோன்பத்ரா புதைபடிவ பூங்கா என்று அழைக்கப்படுகிறது. இது உ.பி.,யில் உள்ள ஒரு புதைபடிவ பூங்காவாகும். இது சோன்பத்ரா மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை 5ஏஇல் ரோபர்ட்சுகஞ்சிலிருந்து 12 கி.மீ. தொலைவில் சல்கன் கிராமத்திற்கு அருகில் உள்ளது. இப்பூங்காவில் கிட்டத்தட்ட 140 கோடிகள் ஆண்டுகள் பழமையானவை என்று மதிப்பிடப்பட்ட புதைபடிவங்கள் உள்ளன.

கைமூர் வனவிலங்கு சரகத்தில் சுமார் 25 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் உள்ள கற்பாறைகளில் புதைபடிவங்கள் வளையங்களாகக் காணப்படுகின்றன.

இந்நிலையில் சல்கான் புதைபடிவ பூங்கா, யுனெஸ்கோவின் தற்காலிக உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.இது சர்வதேச அங்கீகாரத்தை நோக்கிய ஒரு முக்கிய படியாகும்.

பழமையான மற்றும் சிறந்த ஸ்ட்ரோமாடோலைட்டுகளில் சிலவற்றைக் கொண்டிருப்பதாக அறியப்படும் இந்த பூங்கா, பூமியின் ஆரம்பகால உயிரினங்களை பிரதிபலிக்கிறது. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முயற்சியால் சுற்றுசூழல் துறையின் கீழ் அதன் நிரந்தர யுனெஸ்கோ அந்தஸ்தைப் பெறுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன, இது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அங்கீகாரம் உத்தரபிரதேசத்தில் சுற்றுலாவை மேலும் அதிகரிக்கும் மற்றும் பிராந்தியத்தின் வளமான இயற்கை பாரம்பரியத்திற்கு உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us