''ராணுவ வீரர்கள் மீது தனிப் பாசம்'': ராஜ்நாத் சிங் பேச்சு
''ராணுவ வீரர்கள் மீது தனிப் பாசம்'': ராஜ்நாத் சிங் பேச்சு
ADDED : ஜன 14, 2024 01:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லக்னோ: ''நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நமது ராணுவ வீரர்கள் மீது தனிப் பாசம் வைத்துள்ளனர்'' என கான்பூரில் நடந்த ஆயுதப்படை தின விழாவில் ராஜ்நாத் சி்ங் பேசினார்.
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் 8 வது முன்னாள் வீரர்கள் தின கொண்டாட்டங்கள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்தது.
விழாவில் அவர் பேசியதாவது: நாட்டுக்காக ராணுவ வீரர்கள் ஆற்றிய சேவைக்காக தலை வணங்குகிறேன். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், நமது ராணுவ வீரர்கள் மீது தனிப் பாசம் வைத்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து ராஜ்நாத்சிங் மரியாதை செலுத்தினார்.

