sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வரதட்சணை புகார்களுக்கு ஆன்லைன் போர்ட்டல்: புதிதாய் யோசித்த கேரள அரசு

/

வரதட்சணை புகார்களுக்கு ஆன்லைன் போர்ட்டல்: புதிதாய் யோசித்த கேரள அரசு

வரதட்சணை புகார்களுக்கு ஆன்லைன் போர்ட்டல்: புதிதாய் யோசித்த கேரள அரசு

வரதட்சணை புகார்களுக்கு ஆன்லைன் போர்ட்டல்: புதிதாய் யோசித்த கேரள அரசு


ADDED : ஆக 15, 2025 03:15 PM

Google News

ADDED : ஆக 15, 2025 03:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: வரதட்சணை கொடுமை புகார்களுக்கு என தனி ஆன்லைன் போர்ட்டலை கேரள அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் வரதட்சணை கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு எதிரான நடவடிக்கைகள் ஒருபக்கம் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அதற்கான தீர்வுகள் என்பது இன்னமும் சாத்தியமாகவில்லை.

இந் நிலையில் கேரளாவில் வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வை கொடுக்கும் வகையில் புகார் அளிக்க வசதியாக அம்மாநில அரசு ஆன்லைன் போர்ட்டல் ஒன்றை உருவாக்கி இருக்கிறது.

எர்ணாகுளத்தை சேர்ந்த டெல்மி ஜாலி என்பவர் கேரள ஐகோர்ட்டில் தொடுத்த பொது நல வழக்கில், கேரள அரசு பிரமாணப்பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தது. அதில், 2021ம் ஆண்டு கேரள வரதட்சணை தடை சட்டம், 2004ன் படி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வரதட்சணை தடை அதிகாரியாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரியை அரசு நியமித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க ஏதுவாக ஆன்லைன் போர்ட்டல் அறிமுகப்படுத்தி இருப்பதாகவும், அதில் எளிதாக புகாரை பதிவு செய்யலாம் என்று கேரள அரசு கூறி உள்ளது. இதையடுத்து, பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு வக்கீல் அவகாசம் கோரியதை தொடர்ந்து, வழக்கு விசாரணை செப்.16ம் தேதிக்கு கோர்ட் ஒத்தி வைத்தது.






      Dinamalar
      Follow us