sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிஏஏ.,வை அமல்படுத்த மாட்டேன் எனக்கூற மாநிலங்களுக்கு உரிமையில்லை: அமித்ஷா

/

சிஏஏ.,வை அமல்படுத்த மாட்டேன் எனக்கூற மாநிலங்களுக்கு உரிமையில்லை: அமித்ஷா

சிஏஏ.,வை அமல்படுத்த மாட்டேன் எனக்கூற மாநிலங்களுக்கு உரிமையில்லை: அமித்ஷா

சிஏஏ.,வை அமல்படுத்த மாட்டேன் எனக்கூற மாநிலங்களுக்கு உரிமையில்லை: அமித்ஷா


UPDATED : மார் 14, 2024 09:57 AM

ADDED : மார் 14, 2024 09:19 AM

Google News

UPDATED : மார் 14, 2024 09:57 AM ADDED : மார் 14, 2024 09:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ‛குடியுரிமை என்பது மத்திய அரசின் கீழ் வருவதால், சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டேன் எனக் கூற மாநிலங்களுக்கு உரிமை இல்லை' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து, நம் நாட்டுக்குள் அகதிகளாக வந்த அந்தந்த நாட்டு சிறுபான்மையினருக்கு, குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த சட்டம் சில நாட்களுக்கு முன்புதான் அமல்படுத்தப்பட்டது.

இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப்பெற எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதேபோல், தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் தங்கள் மாநிலங்களில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனக் கூறி வருகின்றனர். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: சிஏஏ சட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை. எதிர்க்கட்சியினர் எல்லாவற்றையும் அரசியலாக பார்க்கின்றனர்.

எதிர்க்கட்சியினர் வாக்குறுதிகளை மட்டுமே கொடுப்பார்கள், ஆனால் நிறைவேற்ற மாட்டார்கள். ஆனால் பிரதமர் மோடி அளித்த ஒவ்வொரு வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. ஓட்டுவங்கி அரசியலுக்காக எதிர்க்கட்சியினர் இதனை பயன்படுத்துகின்றனர். சிஏஏ என்பது எந்தவொரு குடிமகனின் உரிமையையும் பறிக்காது; மாறாக இது குடியுரிமை வழங்க வழிசெய்கிறது. நாட்டின் குடியுரிமையை உறுதி செய்வது நமது இறையாண்மைக்கான உரிமை. இந்த விவகாரத்தில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்.

மாநிலங்களுக்கு உரிமையில்லை


சிஏஏ சட்டத்தைக் கண்டு சிறுபான்மையினர் அஞ்ச வேண்டாம் என நானே பலமுறை கூறியிருக்கிறேன். சிஏஏ குறித்து 2019ம் ஆண்டு தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். கொரோனா தொற்று காரணமாகவே சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டேன் எனக் கூற மாநிலங்களுக்கு உரிமை இல்லை. குடியுரிமை என்பது மத்திய அரசின் கீழ் வருவதால் மாநிலங்களுக்கு உரிமை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us