ஆதிச்சநல்லூரில் கலாசார மையம், பொதிகை மலையில் மலையேற்றத் திட்டம்: : மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
ஆதிச்சநல்லூரில் கலாசார மையம், பொதிகை மலையில் மலையேற்றத் திட்டம்: : மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
UPDATED : பிப் 01, 2026 11:57 AM
ADDED : பிப் 01, 2026 11:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: '' ஆதிச்சநல்லூரில் கலாசார மையம் அமைக்கப்படும்,'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மத்திய பட்ஜெட்டில் கூறியதாவது:தமிழகத்தின் ஆதிச்சநல்லூர், அஸ்தினாபுரம் உள்ளிட்ட 15 இடங்களில் கலாசார மையங்கள் அமைக்கப்படும். கலாசார செழுமையை விளக்கும். தமிழகத்தின் பொதிகை மலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மலையேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும். உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீரிலும் மலையேற்ற சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம்.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேங்காய் உற்பத்தியை ஊக்குவிக்க திட்டம் அறிவிக்கப்படும்.
பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம்உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 5 பல்கலை நகரங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

