ADDED : செப் 28, 2025 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:சிறுவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 15 வயது பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
மங்கோல்புரியில் ஒரு பள்ளியில் நேற்று முன் தினம் மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பள்ளி முடிந்த பின், இரவில் மீண்டும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் பலத்த காயமடைந்த பத்தாம் வகுப்பு மாணவன், அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த மங்கோல்புரி போலீசார், தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.