sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாண்டியாவில் குடியேறிய சுமலதா

/

மாண்டியாவில் குடியேறிய சுமலதா

மாண்டியாவில் குடியேறிய சுமலதா

மாண்டியாவில் குடியேறிய சுமலதா


ADDED : ஜன 09, 2025 06:42 AM

Google News

ADDED : ஜன 09, 2025 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாண்டியா: மாண்டியாவின் முன்னாள் எம்.பி., சுமலதா அம்பரிஷ். சுயேச்சை எம்.பி.,யாக இருந்த இவர், தற்போது பா.ஜ.,வில் இணைந்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலில், சீட் பெற அதிகபட்சமாக முயற்சித்தார். பல முறை டில்லி சென்று, மேலிட தலைவர்களை சந்தித்து, சீட் கேட்டார். ஆனால் ம.ஜ.த.,வுடன் பா.ஜ., கூட்டணி அமைத்ததால், சீட் கை நழுவியது.

மாண்டியாவில் குமாரசாமி போட்டியிட்டு, வெற்ற பெற்று மத்தியில் கனரக தொழில் துறை அமைச்சராக இருக்கிறார். தனக்கு சீட் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த சுமலதா, பிரசாரத்துக்கும் செல்லவில்லை. ஓராண்டாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

“நவம்பருக்கு பின் மாண்டியாவுக்கு வருவேன். இங்கேயே வசிப்பேன்,” என, அவர் கூறியிருந்தார். அதன்படி மாண்டியாவில் புதிதாக வாடகை வீடு பார்த்து, நேற்று பூஜை செய்து குடியேறினார்.

வரும் 2028 சட்டசபை தேர்தலில், மாண்டியா தொகுதியில் சுமலதா போட்டியிட திட்டமிட்டுள்ளார். இதற்கு தயாராகும் நோக்கில், மாண்டியாவில் குடியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாட்களில் கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us