sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய்: ஜனாதிபதி ஒப்புதல்

/

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய்: ஜனாதிபதி ஒப்புதல்

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய்: ஜனாதிபதி ஒப்புதல்

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய்: ஜனாதிபதி ஒப்புதல்

4


ADDED : ஏப் 29, 2025 08:37 PM

Google News

ADDED : ஏப் 29, 2025 08:37 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் சஞ்சீவ் கன்னா, மே 13 அன்று ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து தனக்கு அடுத்ததாக, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பொறுப்புக்கு மூத்த நீதிபதி பி.ஆர். கவாயின் பெயரை சஞ்சீவ் கன்னா பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சுப்ரீம் கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாயை நியமிப்பதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து உள்ளார். அவர் மே 14 அன்று பதவியேற்க உள்ளார். அரசியலமைப்பு அளித்துள்ள அதிகாரத்தின் அடிப்படையில் கவாய் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அந்த அறிக்கைியில் அமைச்சர் கூறியுள்ளார். தற்போது, சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதியாக இருக்கும் கவாய், மே 14 முதல் தலைமை நீதிபதியாக பணியை தொடர உள்ளார்.

இவர் , இந்தாண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற உள்ளதால், சுமார் 6 மாதங்களுக்கு தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.






      Dinamalar
      Follow us