sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நிறுவன சொத்தல்ல': உச்ச நீதிமன்றத்தின் கறார் தீர்ப்பு

/

'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நிறுவன சொத்தல்ல': உச்ச நீதிமன்றத்தின் கறார் தீர்ப்பு

'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நிறுவன சொத்தல்ல': உச்ச நீதிமன்றத்தின் கறார் தீர்ப்பு

'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நிறுவன சொத்தல்ல': உச்ச நீதிமன்றத்தின் கறார் தீர்ப்பு

6


UPDATED : பிப் 14, 2026 07:22 AM

ADDED : பிப் 14, 2026 03:42 AM

Google News

6

UPDATED : பிப் 14, 2026 07:22 AM ADDED : பிப் 14, 2026 03:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



புதுடில்லி: 'ஸ்பெக்ட்ரம்' அலைக்கற்றை ஒதுக்கீடு என்பது, தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சொந்த சொத்து அல்ல என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏர்செல், டிஷ்நெட் ஒயர்லெஸ், ஏர்செல் செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் தங்களுக்கு திவால் தீர்வு நடைமுறையைத் துவங்குமாறு, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்திடம் விண்ணப்பித்திருந்தன.

இவை, கடந்த 2006ம் ஆண்டில், அரசு ஏலம் வாயிலாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமங்களையும், பல சேவைகளையும் வழங்குவதற்காக 'யுனிபைடு ஆக்ஸஸ் சர்வீஸ்' உரிமங்களையும் பெற்றிருந்தன. இவ்வழக்கு விசாரணையின்போது, அலைக்கற்றை உரிமங்கள், அந்நிறுவனங்களின் சொத்தாக கருதப்பட்டன.

இதை மத்திய அரசு எதிர்த்தது. அலைக்கற்றை என்பது பொதுவான இயற்கை வளம் என்பதுடன், அதை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது சொத்தாகக் கருத முடியாது என்றும் வாதிட்டது.

திவால் நடைமுறை தொடர்ந்தாலும், நிறுவனங் கள், அலைக்கற்றையை தொடர்ந்து பயன் படுத்தலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இவ்வழக்கை, மத்திய அரசு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு எடுத்துச் சென்றது. தீர்ப்பாயமோ, 'அலைக்கற்றை என்பது பொதுச் சொத்துதான்.

'இருப்பினும், அது, உரிமம் பெற்றுள்ள நிறுவனங்களின் புலனாகாத சொத்தும் ஆகும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள், நிலுவைத் தொகையை செலுத்தாமல் அலைக்கற்றையைப் பயன்படுத்த முடியாது' என்று கூறிவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு:


திவால் நடவடிக்கை நடைமுறையில் இருக்கும்போது, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை நிறுவன சொத்தாக கருதப்படாது.

திவால் சட்டம் வழங்கும் சலுகைகளைப் பயன்படுத்தி, தொலை த்தொடர்புத் துறைக்கு செலுத்தவேண்டிய உரிமக் கட்டணம், அலைக்கற்றை நிலுவைத் தொகையை தள்ளிப்போடவோ, மாற்றியமைக்கவோ முடியாது.

அலைக்கற்றை, பொது நலனுக்காகத்தான் பயன்படுத்தப்பட வேண்டும். நிறுவன மறு சீரமைப்பின்போது, அதனைப் பயன்படுத்தி, பொருளாதார பயனடைய முடியாது. இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் சட்டங்களை மீறி, திவால் சட்டம் செயல்பட முடியாது.






      Dinamalar
      Follow us