டி- 20 உலக கோப்பை அரையிறுதி: 7வது விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து
டி- 20 உலக கோப்பை அரையிறுதி: 7வது விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து
UPDATED : மார் 05, 2026 10:46 PM
ADDED : மார் 05, 2026 08:50 PM

மும்பை: டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது அரையிறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன் எடுத்துள்ளது.
இதனையடுத்து களமிறங்கி உள்ள இங்கிலாந்து அணி 19.1 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன் எடுத்துள்ளது.
இந்தியா, இலங்கையில் 10வது 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.
இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர்.
துவக்க வீரர் அபிஷேக் சர்மா 7 பந்துகளில் 9 ரன் எடுத்து ஜாக்ஸ் பந்தில் சால்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
சஞ்சு சாம்சனுடன் சேர்ந்து அதிரடியாக ரன் குவித்த இஷான் கிஷான் 18 பந்தில் 39 ரன்னில் ரஷித் பந்தில் ஜாக்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
மற்றொரு துவக்க வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 42 பந்துகளில் 89 ரன் எடுத்துஇருந்தபோது ஜாக்ஸ் பந்தில் சால்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
கேப்டன் சூர்யகுமார் 6 பந்துகளில் 11 ரன் எடுத்த போது ரஷீத் பந்துவீச்சில் பட்லர் ஸ்டம்ப்பிங் செய்தார்.
ஷிவம் துபே 25 பந்துகளில் 43 ரன் எடுத்து இருந்த போது ரன் அவுட் ஆனார்.
7 பந்துகளில் 21 ரன் எடுத்த திலக் வர்மா போல்டானார்.
ஹர்திக் பாண்டியா 27 ரன் எடுத்த போது ரன் அவுட் ஆனார்.
இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியின் ஜாக்ஸ் மற்றும் ரஷீத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இலக்கு
இதன்பிறகு 254 என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி உள்ளதுஅந்த அணி 14 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்து விளையாடி வருகிறது.
துவக்க வீரர் பில் சால்ட் 3 பந்துகளில் 5 ரன் எடுத்தபோது ஹர்திக் பாண்டியா பந்தில் அக்சர் படேலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
பும்ரா பந்துவீச்சில்,ஹாரி புரூக் 7 ரன்னில் அக்சர் படேலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
ஜோஸ் பட்லர் 25 ரன் எடுத்திருந்தபோது வருண் சக்கரவர்த்தி பந்தில் போல்டானார்.
டாம் பாண்டன்17 ரன்னில் அக்சர் பந்தில் போல்டானார்.
வில் ஜாக்ஸ் 35 ரன் எடுத்த போது அர்ஷ்தீப் பந்தில், துபேயிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பைனலில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும்.

