sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேஜஸ்விக்கு ஆண் குழந்தை; மம்தா நேரில் வாழ்த்து

/

தேஜஸ்விக்கு ஆண் குழந்தை; மம்தா நேரில் வாழ்த்து

தேஜஸ்விக்கு ஆண் குழந்தை; மம்தா நேரில் வாழ்த்து

தேஜஸ்விக்கு ஆண் குழந்தை; மம்தா நேரில் வாழ்த்து

3


ADDED : மே 28, 2025 05:32 AM

Google News

ADDED : மே 28, 2025 05:32 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா : பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் - ரப்ரி தேவி தம்பதியின் இரண்டாவது மகன், தேஜஸ்வி யாதவ். இவருக்கு, ராஜ்ஸ்ரீ யாதவ் என்பவருடன், 2021ல் திருமணம் நடந்த நிலையில், 2023 மார்ச்சில் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து, தேஜஸ்வி யாதவ் - ராஜ்ஸ்ரீ தம்பதிக்கு நேற்று இரண்டாவதாக அழகான ஆண் குழந்தை பிறந்தது. மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ராஜ்ஸ்ரீ யாதவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இது குறித்து, சமூக வலைதளத்தில் தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட பதிவில், 'காத்திருப்பு இறுதியாக முடிந்தது. எங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. ஜெய் ஹனுமான்' என, குறிப்பிட்டார்.

பாட்னாவில் இருந்து கொல்கட்டாவுக்கு விமானத்தில் வந்த லாலு பிரசாத் யாதவ், ரப்ரி தேவி ஆகியோர், மருத்துவமனைக்கு நேரடியாக சென்று பேரனை பார்த்து குஷியடைந்தனர்.

மருத்துவமனைக்கு நேற்று நேரில் சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேஜஸ்வி - ராஜ்ஸ்ரீ தம்பதிக்கு வாழ்த்து கூறி, குழந்தையை கொஞ்சினார்.






      Dinamalar
      Follow us