நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆக.
13: சமீபத்திய ஆய்வில், தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதற்கு, அப்பகுதியை சேர்ந்த பாதிக்கும் மேற்பட்டோர் விரும்பவில்லை என்றும், ஒன்று பட்ட ஆந்திர மாநிலத்தையே விரும்புகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.
ஆக. 14: தனித் தெலுங்கானா விவகாரத்தில், மத்திய அரசுக்கு தொடர்த்நு நெருக்கடி கொடுப்பதற்காக, அரசு மற்றும் அலுவலகப் பணிகள் புறக்கணிப்பை தொடர்வது என, ஆந்திராவின் தெலுங்கானா பகுதி காங்கிரஸ் அமைச்சர்களும், எம்.பி., எம்.எல்.ஏ.,க்களும் முடிவு செய்தனர்.
ஆக. 17: ஐதராபாத் நகரின் இந்திரா பூங்காவில், தனி தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி, தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கை குழுவினர் 'மகா தர்ணா' போராட்டம் நடத்தினர்.

