sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பசு தலையை வெட்டிய மர்ம கும்பலால் பதற்றம்

/

பசு தலையை வெட்டிய மர்ம கும்பலால் பதற்றம்

பசு தலையை வெட்டிய மர்ம கும்பலால் பதற்றம்

பசு தலையை வெட்டிய மர்ம கும்பலால் பதற்றம்


ADDED : ஜன 20, 2025 06:58 AM

Google News

ADDED : ஜன 20, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தரகன்னடா: ஹொன்னாவராவில் கர்ப்பிணி பசுவை, மர்ம கும்பல் தலையை வெட்டி உடலை கொண்டு சென்றதால், பதற்றம் நிலவுகிறது.

உத்தரகன்னடா, ஹொன்னாவராவின், சால்கோடு கிராமத்தில் வசிக்கும் கிருஷ்ண ஆச்சாரி என்பவர் பசு மாடுகள் வளர்க்கிறார். இவற்றில் ஒரு பசு கர்ப்பமாக இருந்தது.

நேற்று காலை பசுவை புல் மேய விட்டிருந்தார். மாலை வரை புல் மேய்ந்துவிட்டு தானாகவே வீட்டுக்கு வந்துவிடும். ஆனால் இரவாகியும் வீடு திரும்பவில்லை.

கிருஷ்ண ஆச்சாரி நேற்று காலை, பசுவை தேடி சென்ற போது, பசுவின் கால்கள், தலை தனித்தனியே கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் பசுவின் தலையை வெட்டி போட்டு விட்டு, உடலை எடுத்து சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக, ஹொன்னாவரா போலீஸ் நிலையத்தில் கிருஷ்ண ஆச்சாரி புகார் அளித்துள்ளார்.

மர்ம கும்பலை கண்டுபிடித்து தண்டிக்கும்படி கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர். அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us