ADDED : டிச 04, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர்,
ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகர் புறநகரில் தச்சிகம் தேசிய பூங்காவை உள்ளடக்கிய வனப்பகுதி உள்ளது.
இங்கு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் தச்சிகம் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது, பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர்.
இந்த மோதலில், பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் சண்டை நடந்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.