sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பாக்., சிறையில் தந்தையான பயங்கரவாதி: ஓவைசி விளாசல்

/

பாக்., சிறையில் தந்தையான பயங்கரவாதி: ஓவைசி விளாசல்

பாக்., சிறையில் தந்தையான பயங்கரவாதி: ஓவைசி விளாசல்

பாக்., சிறையில் தந்தையான பயங்கரவாதி: ஓவைசி விளாசல்

8


UPDATED : ஜூன் 02, 2025 05:32 AM

ADDED : ஜூன் 02, 2025 02:17 AM

Google News

UPDATED : ஜூன் 02, 2025 05:32 AM ADDED : ஜூன் 02, 2025 02:17 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அல்ஜீயர்ஸ்: மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஜாஹியூர் ரஹ்மான் லக்வி, பாகிஸ்தான் சிறையில் இருந்தபோதே தந்தையாக அனுமதிக்கப்பட்டார் என, ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவரும், எம்.பி.,யுமான அசாதுதீன் ஓவைசி வலியுறுத்தியுள்ளார்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்க, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுக்கள், 33 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளன.

இதில், பா.ஜ., - எம்.பி., வைஜெயந்த் பாண்டா தலைமையிலான குழு மேற்காசிய நாடுகளான சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு சமீபத்தில் சென்றது.

அடுத்ததாக, இந்த குழு வட ஆப்ரிக்க நாடான அல்ஜீரியா சென்றது. அங்குள்ள, புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் இந்த குழு நேற்று கலந்துரையாடியது.

அக்குழுவில் இடம் பெற்றுள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம்., - எம்.பி., அசாதுதீன் ஓவைசி பேசியதாவது:

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாஹியூர் ரஹ்மான் லக்வி என்ற பயங்கரவாதி, பாகிஸ்தான் சிறையில் இருந்த போது, அவருக்கு அந்நாட்டு அரசு சிறப்பு சலுகை வழங்கியது. சிறையில் இருந்தபோதே, அவர் தந்தையாக அனுமதிக்கப்பட்டார். இது, வெறெந்த நாட்டிலும் நடக்காத ஒரு கொடுமை.

இந்த விவகாரத்தில், சர்வதேச பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி கண்காணிப்பு அமைப்பான, எப்.ஏ-.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு, பாக்., மீது உடனடி நடவடிக்கை எடுத்தது.

ஆகையால், பாகிஸ்தானை மீண்டும் அந்த குழுவின் 'கிரே லிஸ்ட்' எனப்படும் சாம்பல் பட்டியலில் சேர்க்க உலக நாடுகள் மற்றும் சமூக அமைப்புகள் வலியுறுத்த வேண்டும்.

இதன் வாயிலாக, அந்நாட்டின் பயங்கரவாத சிறகுகள் முறிக்கப்பட வேண்டும். அப்பாவி மக்களை கொல்வதன் வாயிலாக, இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிராக பாகிஸ்தான் செயல்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us