sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியாவில் முதல் சார்ஜிங் நிலையம்: அறிமுகப்படுத்தியது டெஸ்லா

/

இந்தியாவில் முதல் சார்ஜிங் நிலையம்: அறிமுகப்படுத்தியது டெஸ்லா

இந்தியாவில் முதல் சார்ஜிங் நிலையம்: அறிமுகப்படுத்தியது டெஸ்லா

இந்தியாவில் முதல் சார்ஜிங் நிலையம்: அறிமுகப்படுத்தியது டெஸ்லா


ADDED : ஆக 04, 2025 03:22 PM

Google News

ADDED : ஆக 04, 2025 03:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டெஸ்லா நிறுவனம் முதல் சார்ஜிங் நிலையத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. மும்பையின் பிகேசியில் உள்ள பாந்த்ரா -குர்லா வளாகத்தில் சார்ஜிங் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

உலக பணக்காரரான அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், மின்சார வாகனங்கள், சூரிய பேனல்கள் மற்றும் சேமிப்பு சாதனங்களை உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனம் 2003ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் தனது முதல் சார்ஜிங் நிலையத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இது மின்சார வாகன உற்பத்தியாளரின் இந்திய சந்தையில் முறையான நுழைவைக் குறிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.

இது குறித்து டெஸ்லாவின் அறிக்கை:

டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் அதன் முதல் சலுகையான மாடல் ஓய், வெறும் 15 நிமிட் சூப்பர்சார்ஜிங் மூலம் 267 கி.மீ வரை இலக்கை அடையலாம். டெஸ்லா செயலி மூலம் பயனர்கள் சார்ஜிங்கை அணுகலாம், கண்காணிக்கலாம் மற்றும் பணம் செலுத்தலாம், இது நிகழ்நேர ஸ்டால் கிடைக்கும் தன்மை மற்றும் சார்ஜ் நிலை குறித்து அறிவிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

செப்டம்பர் மாத இறுதிக்குள் மும்பை முழுவதும் லோயர் பரேல், தானே மற்றும் நவி மும்பையில் மேலும் மூன்று சார்ஜிங் நிலையங்களை செயலபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சார்ஜிங் கிடைப்பது ஒரு முக்கியமான தடையாக இருக்கும் சந்தையில் இவி உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான பரவலான நோக்கத்தின் ஒரு பகுதியாக இந்த விரிவாக்கம் அமையும்.

இவ்வாறு டெஸ்லாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us