sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பகையை மறந்து ஒன்று சேர்ந்த தாக்கரே சகோதரர்கள்; மஹா., உள்ளாட்சி தேர்தலுக்கு கூட்டணி அறிவிப்பு

/

பகையை மறந்து ஒன்று சேர்ந்த தாக்கரே சகோதரர்கள்; மஹா., உள்ளாட்சி தேர்தலுக்கு கூட்டணி அறிவிப்பு

பகையை மறந்து ஒன்று சேர்ந்த தாக்கரே சகோதரர்கள்; மஹா., உள்ளாட்சி தேர்தலுக்கு கூட்டணி அறிவிப்பு

பகையை மறந்து ஒன்று சேர்ந்த தாக்கரே சகோதரர்கள்; மஹா., உள்ளாட்சி தேர்தலுக்கு கூட்டணி அறிவிப்பு

4


ADDED : டிச 24, 2025 03:05 PM

Google News

4

ADDED : டிச 24, 2025 03:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்

மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் ஒன்றிணைந்து போட்டியிடுவதாக கூட்டணி அறிவித்தனர்.

சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் இளைய சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரே. சிவசேனாவின் ஆரம்ப காலத்தில் பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே, ஸ்ரீகாந்த் தாக்கரேவின் ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் ஒன்றாக பணியாற்றினர். காலப்போக்கில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது.

தனிக் கட்சி

உத்தவ் தாக்கரேவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாக கருதிய ராஜ் தாக்கரே, 2006ம் ஆண்டு மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா என்ற தனிக் கட்சியை தொடங்கினார். அப்போது முதல் இரு சகோதரர்கள் இடையே பகை நிலவி வந்தது. சமீபத்தில் அரசியல் ரீதியாக இருவருக்கும் ஏற்பட்ட தோல்விகள் காரணமாக, மீண்டும் இணைய முடிவு செய்தனர்.

இதன்படி தான் ஏற்கனவே இருக்கும் காங்கிரஸ் மற்றும் சரத் பவார் தலைமையிலான கூட்டணியில் இருந்து உத்தவ் தாக்கரே வெளியேறி உள்ளார். மும்பை உட்பட மஹாராஷ்டிராவில் உள்ள 29 மாநகராட்சிகளின் 2,869 வார்டுகளுக்கு, 2026 ஜனவரி 15ல், ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரேவின் கட்சியும் ராஜ் தாக்கரேவின் கட்சியும் இணைந்து போட்டியிடுகின்றன. இன்று (டிசம்பர் 24) உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் நேரில் சந்தித்து இதை அறிவித்துள்ளனர்.

20 ஆண்டு கால பகை முடிவு

20 ஆண்டுகால பகையை மறந்து சகோதரர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தது மஹா அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகி உள்ளது. கடந்த ஜூலை மாதம் இருவரும் ஒன்றாக இணைந்து ஹிந்தி திணிப்புக்கு எதிராக மஹாராஷ்டிராவில் மிகப்பெரிய பேரணியை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us