sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மலேசியா பத்துமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

/

மலேசியா பத்துமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

மலேசியா பத்துமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

மலேசியா பத்துமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

9


ADDED : பிப் 11, 2025 03:53 PM

Google News

ADDED : பிப் 11, 2025 03:53 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலாலம்பூர்: பத்துமலை முருகன் கோவிலில் 135வது ஆண்டாக தைப்பூச விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கானோர் திரண்டு நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

தைப்பூச திருநாளான இன்று உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச திருநாள் விமரிசையாக கொண்டாடுகிறார்கள்.

மலேசியாவில் மிகவும் பிரபலமான கோவிலாகவும் முக்கிய ஆன்மிக சுற்றுலா தலமாகவும் விளங்கும் பத்து மலை முருகன் கோவிலில் தைப்பூச திருநாள் கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளது.

மலை மேல் அமைந்துள்ள குகைக் கோவிலுக்கு 272 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். தைப்பூசத்தையொட்டி, இந்தப் படிகள் அறவே கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு பக்தர் கூட்டம் நிரம்பி வழிந்தது. பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேலான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பக்தர்கள் தொடர்ந்து 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா' என்ற முழக்கம் எழுப்பி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் இந்த தைப்பூச கொண்டாட்டத்தில் பக்தர்கள் காவடி, பால்குடம், வாயில் அலகு குத்துதல், முதுகில் அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்தி கடனை செலுத்தி பத்து மலை முருகனை தரிசிக்கிறார்கள்.






      Dinamalar
      Follow us