ADDED : அக் 23, 2024 01:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு கே.ஆர்.புரம் தொகுதிக்கு உட்பட்ட பாபுசாப்பாளையாவில் நேற்று மாலை கனமழை பெய்தது. புதிதாக கட்டப்பட்டு வந்த ஆறு மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுக்குள் சிக்கியிருந்த ஒரு தொழிலாளி, தலையில் பலத்த காயத்துடன் வெளியே வந்தார். கட்டடத்தில் மேலும் சிலர் சிக்கி இருப்பதாக கூறினார்.
தீயணைப்புப் படையினர் அங்கு விரைந்து வந்தனர். மீட்புப் பணியை துரிதப்படுத்தினர். ஆனாலும் கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி, மூன்று பேர் இறந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் சிலரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்தது. இதுகுறித்து கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் கூறுகையில், “கட்டுமானப் பணிகளை தரமான முறையில் மேற்கொள்ளவில்லை. மழையும் பெய்ததால் தாக்குபிடிக்க முடியாமல் கட்டடம் சரிந்து உள்ளது,'' என்றார்.

