sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நிலவில் நிலையான மனித வாழ்விடத்தை உருவாக்குவதே தற்போதைய விண்வெளி போட்டி: சுனிதா வில்லியம்ஸ்

/

நிலவில் நிலையான மனித வாழ்விடத்தை உருவாக்குவதே தற்போதைய விண்வெளி போட்டி: சுனிதா வில்லியம்ஸ்

நிலவில் நிலையான மனித வாழ்விடத்தை உருவாக்குவதே தற்போதைய விண்வெளி போட்டி: சுனிதா வில்லியம்ஸ்

நிலவில் நிலையான மனித வாழ்விடத்தை உருவாக்குவதே தற்போதைய விண்வெளி போட்டி: சுனிதா வில்லியம்ஸ்

2


ADDED : ஜன 20, 2026 10:24 PM

Google News

ADDED : ஜன 20, 2026 10:24 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நிலவில் நிலையான மனித வாழ்விடத்தை உருவாக்குவதே தற்போதைய விண்வெளி போட்டி என்று விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கூறினார்.

தனது 60 வயதில் நாசா விண்வெளிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற .சுனிதா வில்லியம்ஸ், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தின் தொழில்நுட்பக் கோளாறுகளால், 8 நாட்கள் திட்டமிடப்பட்ட பயணம் நீட்டிக்கப்பட்டு, சுமார் ஒன்பது மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து கடந்தாண்டு மார்ச் மாதத்தில் பூமிக்குத் திரும்பிய அனுபவத்திற்குப் பிறகு நிலவில் மனிதன் வாழ்வது குறித்து கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ் அளித்த பேட்டி:

'விண்வெளியில் கைவிடப்பட்டதாக நான் உணரவில்லை, 'மற்றவர்களுக்கு ஏன் அப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டிருக்கலாம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், விண்கலங்களை நாங்கள் எப்படி உருவாக்குகிறோம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அவற்றை எப்படி ஏவுகிறோம் என்ற செயல்முறையின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையும் திடமான பற்றும் உண்டு.

இதுவே ஸ்டார்லைனர் விண்கலத்தின் முதல் ஆட்கள் சென்ற பயணமாகும். இது போயிங் நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான சோதனைப் பயணமாக இருந்தது, மேலும் இதில் சில பின்னடைவுகள் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் அப்போது ஏற்பட்ட பிரச்சனைகள் - எதிர்பாராத முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தின. திட்டமிட்டபடி விண்கலத்தால் குழுவினருடன் திரும்ப முடியவில்லை.

'ஆமாம், எங்களுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது... சில தடங்கல்களை நாங்கள் எதிர்பார்த்தோம். இது நாங்கள் முழுமையாக எதிர்பார்க்காத ஒரு சிக்கல். ஆனால் நாங்கள் விண்வெளி நிலையக் குழுவின் ஒரு பகுதியாக இருப்போம் என்பது எங்களுக்குத் தெரியும்,

தற்போது புதிய விண்வெளிப்போட்டி என்பது, நிலவில் நீண்ட காலம் தங்குவதற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குவது மற்றும் அங்கிருக்கும் இயற்கை வளங்களை பயன்படுத்துவது பற்றியது. நாம் நிலவில் நிலையாக வாழ்வதற்கு நாம் கற்கும் பாடங்கள், வருங்காலத்தில் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் திட்டங்களுக்கு மிக அவசியமான ஒரு முன்னோடிப் பயிற்சியாக அமையும்.

நாசாவின் ஆர்டெமிஸ் திட்டம் போன்ற அரசு திட்டங்களுடன், ஸ்பேஸ்-எக்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் சர்வதேச நாடுகளும் இணைந்து செயல்படுவது விண்வெளி ஆய்வின் அடுத்த கட்டத்திற்கு மிக முக்கியமானது.இவ்வாறு சுனிதா வில்லியம்ஸ் கூறினார்.






      Dinamalar
      Follow us