sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கவச் திட்டம் முடங்கிக் கிடக்கிறது: காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு

/

கவச் திட்டம் முடங்கிக் கிடக்கிறது: காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு

கவச் திட்டம் முடங்கிக் கிடக்கிறது: காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு

கவச் திட்டம் முடங்கிக் கிடக்கிறது: காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு

4


ADDED : டிச 22, 2025 06:06 PM

Google News

4

ADDED : டிச 22, 2025 06:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கவச் திட்டம் முடங்கிக் கிடக்கிறது. ஐந்து வருடங்களாகப் பெரும் விளம்பரம் மட்டுமே செய்யப்படுகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: மத்திய பட்ஜெட்டுக்கு சில நாட்களுக்கு முன்பு, ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக ரயில் கட்டணம் அதிகரித்துள்ளது. தனி ரயில்வே பட்ஜெட் இல்லாததால், பொறுப்புக்கூறல் என்பதே இல்லாமல் போய்விட்டது. ஆக்கபூர்வமான செயல்பாடுகளைக் காட்டிலும், போலியான விளம்பரங்களில் பாஜ அரசு மும்முரமாக இருப்பதால், ரயில்வே துறை சீரழிந்து வருகிறது.

ரயில்கள் தடம் புரள்கிறது. இறப்புகள் பெருகுகின்றன. 2014ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு ரயில் விபத்துக்களில் 2.18 லட்சம் இறப்புகள் பதிவாகியுள்ளன. ரயில்கள் இனி பாதுகாப்பானவை அல்ல, அவை உயிருடன் விளையாடும் ஒரு சூதாட்டம்.

கவச் திட்டம் முடங்கிக் கிடக்கிறது. ஐந்து வருடங்களாகப் பெரும் விளம்பரம் மட்டுமே, செய்யப்படுகிறது. ஆனால் துளியும் அக்கறை இல்லை. கவச் திட்டம் 3% வழித்தடங்களையும், 1% க்கும் குறைவான இன்ஜின்களையும் மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இது வெறும் வெற்றுப் பேச்சுகளில் மட்டுமே இருக்கும் ஒரு பாதுகாப்பு அமைப்பு.

பணியிடங்கள் காலியாக உள்ளன, எதிர்காலம் முடங்கியுள்ளது. இளைஞர்கள் நிரந்தரப் பணிக்காகக் காத்திருக்கின்றனர், ஒப்பந்த அடிப்படையிலான நியமனங்கள் அதிகரித்து வருகின்றன.ஸலோகோ பைலட்டுகளுக்கு அடிப்படை ஓய்வு கூட மறுக்கப்படுகிறது.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 453 நிலையங்களை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், ஒரே ஒரு நிலையம் மட்டுமே மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆக்கப்பூர்வமான செயல்பாடு இல்லை: ரீல்ஸ் எடுக்கப்பட்டு, ரயில்களில் ஏடிஎம்கள் விளம்பரப்படுத்தப்படும் வேளையில், ரயில்வே துறை நஷ்டத்தில் தவிக்கிறது.

160 கி.மீ. வேகம் எனப் பெருமையாகக் கூறப்பட்டாலும், வந்தே பாரத் ரயில் 76 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்கிறது.பாஜ அரசின் கீழ், ரயில்வே துறை புறக்கணிப்பு, அக்கறையின்மை மற்றும் போலியான விளம்பரங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us