sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பீஹாரில் 122 தொகுதிகளில் இன்று கடைசி கட்ட தேர்தல்

/

பீஹாரில் 122 தொகுதிகளில் இன்று கடைசி கட்ட தேர்தல்

பீஹாரில் 122 தொகுதிகளில் இன்று கடைசி கட்ட தேர்தல்

பீஹாரில் 122 தொகுதிகளில் இன்று கடைசி கட்ட தேர்தல்

2


ADDED : நவ 11, 2025 02:51 AM

Google News

2

ADDED : நவ 11, 2025 02:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: பீஹாரில் முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மீதமுள்ள 122 தொகுதிகளில், இரண்டாம் மற்றும் கடைசி கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு, இரு கட்டங்களாக நடந்து வரும் தேர்தலில், ஆளும் பா.ஜ., - எதிர்க்கட்சியான காங்., கூட்டணிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது.

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, புது போட்டியாளராக தேர்தல் களத்தில் குதித்துள்ளது.

65 சதவீத ஓட்டுகள் ஆளும் தே.ஜ., கூட்டணி யின் முதல்வர் வேட்பாள ராக நிதிஷ் குமார் நிறுத்தப் பட்டுள்ள நிலையில், 'மஹாகட் பந்தன்' கூட்டணி யில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பீஹாரின், 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில், கடந்த 6ல் முதற்கட்ட தேர்தல் நடந்தது. இதில், 65 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

இந்நிலையில், முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமுள்ள சம்பாரண் மேற்கு, கிழக்கு, சீதாமர்ஹி, மதுபனி, சுபவுல், அராரியா உள்ளிட்ட மாவட்டங்களில், 122 தொகுதிகளில், இரண்டாம் மற்றும் கடைசி கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.

காலை 7:00 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு, மாலை 6:00 மணி வரை நடக்கும். இதற்காக மொத்தம், 45,399 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில், 40,073 ஓட்டுச்சாவடிகள் கிராமப்புறங்களில் உள்ளன. பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மொத்தமுள்ள, 7.42 கோடி வாக்காளர்களில், 3.67 கோடி பேர் இரண்டாம் கட்ட தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர். இதில், 30 - 60 வயதுக்குட்பட்டோரின் எண்ணிக்கை, 2.28 கோடி; 18 - 19 வயதுக்குட்பட்டோரின் எண்ணிக்கை, 7.69 லட்சம்.

ஆளும் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான பிஜேந்திர பிரசாத் யாதவ் - சுபவுல் தொகுதியிலும்; பா.ஜ., அமைச்சர்களான பாபிரேம் குமார் - கயா டவுன்; ரேணு தேவி - பெட்டியா, நீரஜ் குமார் சிங் - சத்தாபூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

ஐக்கிய ஜனதா தள அமைச்சர்களான லேசி சிங் - தம்தஹா; ஷீலா மண்டல் - புல்பராஸ்; ஸமா கான் - செயின்பூர் தொகுதியிலும் களம் காண்கின்றனர். இத்தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.

வரும் 14ல் முடிவுகள் கடைசி கட்ட தேர்தலை சந்திக்கும் 122 தொகுதிகளில், 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நவாடா மாவட்டத்தின் ஹிசுவா தொகுதியில் அதிகபட்சமாக, 3.67 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

லாரியா, சன்பதியா, ரக்சால், திரிவேணிகஞ்ச், சுகவுலி, பன்மகி ஆகிய தொகுதிகளில், தலா 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இன்று ஓட்டுப்பதிவு முடிந்ததும், முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல்களில் பதிவான ஓட்டுகள், வரும் 14ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.






      Dinamalar
      Follow us