திமுக.,வின் தவறான ஆட்சியால் மக்கள் விரக்தி: பிரதமர் மோடி
திமுக.,வின் தவறான ஆட்சியால் மக்கள் விரக்தி: பிரதமர் மோடி
UPDATED : மார் 29, 2024 04:06 PM
ADDED : மார் 29, 2024 12:22 PM

புதுடில்லி: ‛‛ இன்று மாலை 5 மணிக்கு, தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடன் நமோ செயலி வாயிலாக கலந்துரையாட உள்ளேன்'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர், ‛எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: லோக்சபா தேர்தலில் கடுமையாக உழைக்கும் தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடன் நமோ செயலி வாயிலாக ‛ எனது பூத் வலிமையான பூத்' என்ற நிகழ்ச்சி வாயிலாக இன்று( மார்ச் 29) மாலை 5 மணிக்கு கலந்துரையாட காத்திருக்கிறேன்.தமிழக நிர்வாகிகள் மக்கள் மத்தியில் பணியாற்றும் விதமும், பா.ஜ., அரசின் சாதனைகளை மாநிலம் முழுவதும் உறுதியுடன் தெரிவிப்பதும் பாராட்டுக்குரியது.
தி.மு.க.,வின் தவறான ஆட்சியால் தமிழக மக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.நமது கட்சியை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறது என்பதும் உண்மைதான். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

