sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'தரமான மருந்துகள் வாங்க மாநில அரசிடம் பணமில்லை'

/

'தரமான மருந்துகள் வாங்க மாநில அரசிடம் பணமில்லை'

'தரமான மருந்துகள் வாங்க மாநில அரசிடம் பணமில்லை'

'தரமான மருந்துகள் வாங்க மாநில அரசிடம் பணமில்லை'

1


ADDED : டிச 09, 2024 06:57 AM

Google News

ADDED : டிச 09, 2024 06:57 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹூப்பள்ளி: ''தரமான மருந்துகளை வாங்கவும், மாநில அரசிடம் பணம் இல்லை. தரமற்ற மருந்துகளை வினியோகிக்கும் நிறுவனங்களிடம் மருந்துகள் வாங்குகிறது,'' என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி குற்றம்சாட்டினார்.

இது குறித்து, ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மாநிலத்தில் பொருளாதாரம் சீர் குலைந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் மருந்துகளே இல்லை. டாக்டர்கள் சீட்டு எழுதி கொடுத்து,

வெளியே வாங்கி வரும்படி நோயாளிகளிடம் கூறுகின்றனர். மாநிலத்தை இத்தகைய சூழ்நிலைக்கு காங்கிரஸ் அரசு தள்ளிவிட்டது. தரமான நிறுவனங்களிடம் மருந்துகள் வாங்க, மாநில அரசிடம் பணம் இல்லை.

எனவே கண்ட, கண்ட நிறுவனங்களிடம் மருந்துகள் வாங்குகிறது. இதன் விளைவாக பல்லாரியில் குழந்தை பிரசவித்த பெண்கள் இறக்கின்றனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவுக்கு, கண் கெட்ட பின் புத்தி வந்துள்ளது. சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்துள்ளார். தன் தவறை மூடி மறைக்க, மத்திய அரசை குற்றம் சாட்டுகிறார். ஐ.வி., குளுக்கோசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக குற்றம்சாட்டுகிறார்.

மத்திய அரசிடம் அனுமதி பெறும் போது, தரமான மருந்துகள் அனுப்பி அதன்பின் நிறுவனங்கள் தரமில்லாத மருந்துகளை அனுப்பினால், அதற்கு மத்திய அரசு பொறுப்பா. மருந்துகள் சப்ளையாகும் போது, அவற்றின் தரத்தை மாநில அரசு பரிசோதிக்க வேண்டாமா.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us