sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜாபர் சேட் மீதான அமலாக்க துறை வழக்கு: தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்

/

ஜாபர் சேட் மீதான அமலாக்க துறை வழக்கு: தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்

ஜாபர் சேட் மீதான அமலாக்க துறை வழக்கு: தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்

ஜாபர் சேட் மீதான அமலாக்க துறை வழக்கு: தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்

12


ADDED : அக் 05, 2024 02:39 AM

Google News

ADDED : அக் 05, 2024 02:39 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, ஓய்வுபெற்ற தமிழக டி.ஜி.பி., ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள பணப்பரிமாற்ற மோசடி வழக்கு விசாரணைக்கு தடை விதித்து, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

ஜாபர் சேட், தமிழக டி.ஜி.பி.,யாக கடந்த 2006 - 11 தி.மு.க., ஆட்சியில் பதவி வகித்தவர்.

அந்த காலகட்டத்தில், சென்னை திருவான்மியூரில் வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டுமனையை, இவர் முறைகேடாக பெற்றதாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் 2011ல் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை, 2019 மே 23ல் ரத்து செய்தது. லஞ்ச ஒழிப்புத் துறை பதிவுசெய்த வழக்கின் அடிப்படையில், பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது, அமலாக்கத்துறையினர் 2020 ஜூன் 22ல் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாபர் சேட் மனு தாக்கல் செய்தார்.

ஆக., 21ல் உத்தரவு


அதில், 'எனக்கு எதிரான ஊழல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் 2019-ல் ரத்து செய்த நிலையில், அமலாக்கத் துறை வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்கக் கூடாது.

'என் மனைவிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவுசெய்த வழக்கு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, என் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் அமர்வு, ஜாபர் சேட்டுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்து ஆக., 21ல் உத்தரவிட்டது.

பின்னர் திடீர் திருப்பமாக, ஆக., 23ல் அந்த உத்தரவை திரும்ப பெற்ற சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் சில விளக்கங்கள் பெறவேண்டி இருப்பதால் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டது.

செப்., 30ல் கருத்து


இதை எதிர்த்து, ஜாபர் சேட் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அமர்வு, வழக்கு தொடர்பான விபரங்களை சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரிடம் கேட்டு பெற்றது.

அதை ஆய்வு செய்த நீதிபதிகள், 'விசாரணைக்கு ஏற்கனவே தடை விதித்த நிலையில், மறுவிசாரணைக்கு மீண்டும் உத்தரவிட்டது முற்றிலும் தவறானது' என, செப்., 30ல் கருத்து தெரிவித்தனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ஜாபர் சேட் வழக்கில் உச்ச நீதிமன்றம் விரிவாக விசாரணை மேற்கொள்ள உள்ளது. நவ., 22ல் அடுத்தக்கட்ட விசாரணை துவங்கும். அதுவரையில் அனைத்து விசாரணைக்கும் தடை விதிக்கப்படுகிறது.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்று, மறுவிசாரணைக்கு உத்தரவிடும் போக்கு குறித்து சில சட்டங்கள் வகுக்கப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us