sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வரும் பணி மும்முரம்! துபாய், ஜெட்டாவுக்கு பறந்தன சிறப்பு விமானங்கள்

/

இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வரும் பணி மும்முரம்! துபாய், ஜெட்டாவுக்கு பறந்தன சிறப்பு விமானங்கள்

இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வரும் பணி மும்முரம்! துபாய், ஜெட்டாவுக்கு பறந்தன சிறப்பு விமானங்கள்

இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வரும் பணி மும்முரம்! துபாய், ஜெட்டாவுக்கு பறந்தன சிறப்பு விமானங்கள்

7


ADDED : மார் 04, 2026 01:30 AM

Google News

7

ADDED : மார் 04, 2026 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக மேற்காசிய நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில், மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது. 'இண்டிகோ, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட்' விமான நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி சிறப்பு விமானங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மேற்காசியாவில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் படிப்படியாக மீட்கப்பட்டு, தாயகம் அழைத்து வரப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்காசிய நாடுகளான ஈரான் - இஸ்ரேல் இடையே போர் மேகம் சூழ்ந்திருப்பதால், அந்த பிராந்தியத்தின் சர்வதேச வான்வெளிப் பகுதி, பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டன. விமான போக்குவரத்து முடங்கியதால், ஐக்கிய அரசு எமிரேட்சின் துபாய் விமான நிலையம் ஸ்தம்பித்துள்ளது. அங்கிருந்து தாயகம் திரும்ப முடியாமல் இந்திய பயணியர் சிக்கி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியால், 'இண்டிகோ, ஏர் இந்தியா' மற்றும் 'ஸ்பைஸ் ஜெட்' விமான நிறுவனங்களின் சிறப்பு மீட்பு விமானங்கள் மூலம் துபாயில் இருந்து நேற்று காலை இந்திய பயணியர் பத்திரமாக தாயகம் திரும்பினர்.

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்தும் இண்டிகோ நிறுவனத்தின் 10 சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. தாக்குதல் நடக்காத சமயத்தில், சூழ்நிலையை பொறுத்து அந்த விமானங்கள் புறப்படும் என தெரிகிறது.

மேலும், தடை செய்யப்பட்ட வான்வெளியை தவிர்த்து, மாற்று வழியில் விமானங்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், துபாயில் சிக்கி இருக்கும் பயணியரை தாயகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மும்முரமாக செய்து வருகிறது.

இதற்கிடையே, இந்தியா - மேற்காசியா இடையே வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவைகள், வான்வெளி கட்டுப்பாடுகள் அடிப்படையில் குறைந்த அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தலைமையில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உயர் நிலை ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், விமான நிறுவனங்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

விமான டிக்கெட் கட்டணத்தை திரும்ப வழங்குதல், விமான நேரத்தை மாற்றி அமைத்தல், பயணியருக்கான உதவி ஆகியவற்றை தெளிவாகவும், வெளிப்படையாகவும் வழங்க வேண்டும் என்றும், பயணியரின் பாதுகாப்பில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்றும் விமான நிறுவனங்களிடம் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிறுவனங்கள், விமான நிலைய நிர்வாகங்கள், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து பாதுகாப்பான சேவைகளை உறுதி செய்யும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Image 1543821



ஜெட்டாவுக்கு 4 விமானங்கள்


இண்டிகோ நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஓமன் நாட்டின் மஸ்கட், சவுதி அரேபியாவின் ஜெட்டா, மதீனா மற்றும் கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் இருந்து குறைவான அளவில் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளோம். இந்த நான்கு இடங்களில் இருந்தும் 26 விமானங்கள் தற்போதைக்கு இயக்கப்படும். ஐக்கிய அரபு எமிரேட்சின் முக்கிய நகரங்களில் இருந்து இன்று மீட்பு விமானங்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
நிலைமை சீரடைந்ததும் படிப்படியாக விமான சேவை அதிகரிக்கப்படும். பிற பகுதிகளில் விமானங்களை இயக்குவது குறித்து நிலைமையை கண்காணித்து வருகிறோம். வான்வெளி போக்குவரத்துக்கான தடை, தாக்குதல் அபாயம் நீங்கிய பின், மற்ற பகுதிகளில் இருந்தும் விமானப் போக்குவரத்து துவங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




துபாயில் விமான சேவை 1,200லிருந்து 20 ஆனது


துபாய் விமான நிலையத்தில் இருந்து தினசரி 1,200 விமானங்கள் வழக்கமாக இயக்கப்படும். இந்நிலையில், தாக்குதல் அபாயம் மற்றும் வான்வெளி மூடல் காரணமாக, தற்போது மிக குறைந்த அளவு விமானங்களே இயக்கப்படுகின்றன. விமான சேவைகள் குறித்து வெளியான தரவுகளின்படி, துபாய் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம், 16 புறப்பாடு மற்றும் 4 வருகை என மொத்தம் 20 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரத்தில், ஒரு நாளில் மட்டும் 2,830 புறப்பாடுகள், 2,824 வருகைகள் என மொத்தம் 5,654 விமான சேவைகளை விமான நிலையம் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம், மும்பையிலிருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம் மட்டும் அதிகாலையில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது. சென்னை, பெங்களூரு மற்றும் டில்லியில் இருந்து துபாய் சென்ற விமானங்கள், புறப்பட்ட இடத்திற்கே திருப்பி விடப்பட்டன. வான்வெளி மூடப்பட்டதால், எமிரேட்ஸ், எதிஹாட் மற்றும் கத்தார் ஏர்வேஸ் போன்ற முன்னணி விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ரத்து செய்துள்ளன.



சென்னை வந்தனர் 217 பயணியர்


மேற்காசிய நாடான ஐக்கிய அரசு எமிரேட்சின் துபாயில் சிக்கித் தவிக்கும் பயணியர் நாடு திரும்புவதற்காக, துபாய் அரசு நேற்று முன்தினம் நள்ளிரவில், குறிப்பிட்ட சில விமானங்களை மட்டும் இயக்குவதற்கு அனுமதி அளித்தது. இதையடுத்து, 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' சின் பயணியர் விமானம், 217 பேருடன் புறப்பட்டு நேற்று அதிகாலை சென்னை வந்தது.
பின், சென்னை விமான நிலையத்தில் பரிதவித்த வெளிநாட்டு பயணியரை ஏற்றிக்கொண்டு, மீண்டும் துபாய் செல்வதற்கு தயாரானது. நேற்று அதிகாலை 3:53 மணிக்கு, 60 பேருடன் சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட்டது.
மும்பையை கடந்து அரபிக் கடல் பகுதியில், 38,000 அடி உயரத்தில் பறந்தபோது, போர் சுழல் மீண்டும் அதிகரித்துள்ளதால், துபாய் வான்வழி மூடப்பட்டுள்ளதாக, விமானிக்கு அவசர தகவல் வந்தது. இதையடுத்து மீண்டும் சென்னை திரும்பிய விமானம், நேற்று காலை 7:20 மணிக்கு, பாதுகாப்பாக தரையிறங்கியது.



தலைவர்களுடன் மோடி பேச்சு


மேற்காசியாவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல் காலித் மற்றும் ஓமன் சுல்தான் ஹாய்தம் பின் தாரிக் ஆகியோருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் நேற்று பேசினார்.
அப்போது அந்த நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தன் கவலையை தெரிவித்தார். மேலும் அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலம் குறித்தும் கேட்டறிந்தார்.








      Dinamalar
      Follow us