ADDED : ஆக 14, 2025 03:50 PM

கோல்கட்டா: 'வங்கம் இல்லாவிட்டால் இந்தியாவுக்கு சுந்திரம் கிடைத்திருக்காது,' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில், குழந்தை திருமணங்களைத் தடுப்பதை நோக்கமாக கொண்ட 'கன்யாஸ்ரீ' திட்டத்தின் 12வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் முதல்வர் மம்தா பேசியதாவது:
வங்கம் இல்லாவிட்டால், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. வங்க மண் ரவீந்திரநாத் தாகூர், நஸ்ருல் இஸ்லாம் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் போன்ற சிறந்த மனிதர்களை உருவாக்கியுள்ளது. தேசிய கீதம், தேசிய பாடல் மற்றும் 'ஜெய் ஹிந்த்' முழக்கம் அனைத்தும் வங்காளிகளின் படைப்புகள்,
நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களில் பெரும்பாலோர் வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நிலைநிறுத்தி, (போர்ட் பிளேரில் உள்ள) செல்லுலார் சிறையில் உள்ள கைதிகளில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் வங்காளிகள் என்பதை நீங்கள் காண்பீர்கள்.
பன்முகத்தன்மைக்கு மத்தியில் ஒற்றுமையைக் குறிக்கும் நம்பிக்கையின் கலங்கரை விளக்கம் தான் வங்கம்.நாங்கள் வலிமையானவர்கள் மற்றும் ஒற்றுமையானவர்கள்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ரூ.17,000 கோடி செலவிடப்பட்டுள்ளது, இது ஐநா அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இவ்வாறு மம்தா பேசினார்.