sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அவங்க பெரிய ஊழல்வாதிகள்; பிரதமர் மோடி விளாசல்

/

அவங்க பெரிய ஊழல்வாதிகள்; பிரதமர் மோடி விளாசல்

அவங்க பெரிய ஊழல்வாதிகள்; பிரதமர் மோடி விளாசல்

அவங்க பெரிய ஊழல்வாதிகள்; பிரதமர் மோடி விளாசல்

24


ADDED : நவ 12, 2024 02:29 PM

Google News

ADDED : நவ 12, 2024 02:29 PM

24


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: 'மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சியினர் மிகப்பெரிய ஊழல்வாதிகள்' என பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம், சந்திரபூர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: விவசாயிகளுக்கு நெருக்கடியைச் சமாளிக்க உதவும் வகையில் எங்கள் அரசு அவர்களுக்கு நிதியுதவி அளிக்கிறது. எங்கள் தேர்தல் வாக்குறுதி மாநில வளர்ச்சிக்கு உத்தரவாதமாக இருக்கும். சுதந்திரத்திற்குப் பிறகு, தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகள் முன்னேற காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.



ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வர காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் விரும்புகிறது. சமூகத்தை பிளவுபடுத்த காங்கிரஸ் விரும்புகிறது. நாடு செழிக்க மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சியினர் மிகப்பெரிய ஊழல்வாதிகள்.

மாநில வளர்ச்சிக்கு மகா விகாஸ் அகாடி கட்சியினர் தடையாக இருக்கிறார்கள். பா.ஜ., அரசு மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளது. கடந்த 2.5 ஆண்டுகளில் இரட்டிப்பு வேகத்தில் வளர்ச்சியை பார்த்து இருப்பீர்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.






      Dinamalar
      Follow us