உள்ளடக்கத்திற்கு செல்ல

உண்மைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்: பிரதமர் மோடி பேச்சு குறித்து கார்கே கருத்து
உண்மைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்: பிரதமர் மோடி பேச்சு குறித்து கார்கே கருத்து
ADDED : ஜூலை 03, 2024 02:22 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி: 'பிரதமர் மோடி ராஜ்யசபாவில் பேசியது, உண்மைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் பிரதமர் மோடி உரை துவக்கிய சிறிது நிமிடங்களிலேயே எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் முழக்கம் எழுப்பினர். பிறகு, ராஜ்யசபாவில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது. இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: ராஜ்யசபாவில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, பிரதமர் மோடி பேசியது, உண்மைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள். பொய் சொல்வது அவரது வழக்கம்.
உருவ பொம்மை
