sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திருக்கார்த்திகை உற்சவ விழா; கொடியேற்றம் இன்று நடக்கிறது

/

திருக்கார்த்திகை உற்சவ விழா; கொடியேற்றம் இன்று நடக்கிறது

திருக்கார்த்திகை உற்சவ விழா; கொடியேற்றம் இன்று நடக்கிறது

திருக்கார்த்திகை உற்சவ விழா; கொடியேற்றம் இன்று நடக்கிறது


ADDED : டிச 04, 2024 10:17 PM

Google News

ADDED : டிச 04, 2024 10:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு; பாலக்காடு அருகே, திருவாலத்தூர் இரண்டு மூர்த்தி பகவதி அம்மன் கோவில் திருக்கார்த்திகை உற்சவ விழா கொடியேற்றம் இன்று நடக்கிறது.

கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ளது திருவாலத்தூர் இரண்டு மூர்த்தி பகவதி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை உற்சவம் நடப்பது வழக்கம்.

நடப்பாண்டு உற்சவத்தின் கொடியேற்றம், இன்று மாலை 6:00 மணிக்கு கோவில் தந்திரி அண்டலாடி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடின் தலைமையில் நடக்கிறது. தொடர்ந்து, 13ம் தேதி வரை நடக்கும் கலை நிகழ்ச்சிகளை மலம்புழா எம்.எல்.ஏ., பிரபாகரன் துவக்கி வைக்கிறார். மலபார் தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் முரளி பேசுகிறார்.

திருகார்த்திகை நாளான, 13ம் தேதி மாலை 6:00 மணிக்கு உற்சவ விழாவின் சிறப்பு அம்சமாக பத்தர்கள் சுற்றுவிளக்கேற்றி வழிபடும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பகவதி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் அறக்கட்டளை தலைவர் தம்பான், உற்சவர் கமிட்டி செயலாளர் நாராயணன்குட்டி, நிர்வாக அதிகாரி அகில் விஷ்ணு ஆகியோர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us