sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கட்சிக்கு உதவாதவர்கள் ஓய்வு பெறுங்கள்; காங்கிரஸ் தலைவர் கார்கே காரசாரம்

/

கட்சிக்கு உதவாதவர்கள் ஓய்வு பெறுங்கள்; காங்கிரஸ் தலைவர் கார்கே காரசாரம்

கட்சிக்கு உதவாதவர்கள் ஓய்வு பெறுங்கள்; காங்கிரஸ் தலைவர் கார்கே காரசாரம்

கட்சிக்கு உதவாதவர்கள் ஓய்வு பெறுங்கள்; காங்கிரஸ் தலைவர் கார்கே காரசாரம்

19


ADDED : ஏப் 10, 2025 12:58 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 12:58 AM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமதாபாத்: ''கட்சிக்கு உதவாத நபர்கள் தயவு செய்து ஓய்வு பெறுங்கள். அதே போல், கட்சி பொறுப்புகளை நிறைவேற்றாதவர்களும் கட்சியில் இருந்து விலகுங்கள்,'' என, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையில், காங்., செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.

இதில், அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சி பார்லிமென்ட் குழு தலைவர் சோனியா, அவரது மகனும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வெளிப்படைத்தன்மை

கூட்டத்தில் கார்கே பேசியதாவது:

கட்சியில் மாவட்ட தலைவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அவர்களது நியமனம் வெளிப்படைத்தன்மையுடன் பாரபட்சமின்றி நடக்கும்.

நியமிக்கப்பட்ட ஓராண்டுக்குள், சிறந்த தொண்டர்களை சேர்த்து 'பூத்' கமிட்டி, மண்டல கமிட்டியை மாவட்ட தலைவர் உருவாக்க வேண்டும்.

இதில் எந்த சார்பும் இருக்கக்கூடாது. இனி, தேர்தல்களில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் போது, மாவட்ட தலைவர்களின் கருத்துகளை கேட்க முடிவு செய்துள்ளோம்.

கட்சிக்கு உதவாத நபர்கள் தயவு செய்து ஓய்வு பெறுங்கள்.

அதேபோல், கட்சி பொறுப்புகளை நிறைவேற்றாதவர்களும் ஓய்வு பெற வேண்டும்.

வெற்றி பெறுவோம்

நாம் மீண்டும் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடுகிறோம். இந்த இரண்டாவது சுதந்திரப் போரில், ஒரே வித்தியாசம் என்னவென்றால், அப்போது வெளிநாட்டினர் அநீதி, வறுமை, சமத்துவமின்மை, வகுப்புவாதத்தை ஊக்குவித்தனர்.

தற்போது அவற்றை, நம் சொந்த அரசு செய்கிறது. இந்த போரில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஓரங்கட்டப்பட்ட நாற்காலி

ஆமதாபாதில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில், காங்., சார்பில் பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதில், சோனியா, ராகுல், வேணுகோபால் உள்ளிட்டோர் 'சோபா'வில் அமர்ந்திருந்தனர். ஆனால், கட்சியின் தேசிய தலைவரான கார்கே, தனி நாற்காலியில் ஓரமாக உட்கார்ந்திருந்தார். இது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாள்வியா, 'காங்., தேசிய தலைவரான கார்கே, வயதில் மூத்தவரும்கூட.'அவருக்கு தனி நாற்காலி அளிக்க வேண்டும் என நினைத்திருந்தால், அதை நடுவில் தானே போட்டிருக்க வேண்டும். ஏன் ஓரமாக அமர வைக்கப்பட்டார்?' என, கேள்வி எழுப்பினார்.








      Dinamalar
      Follow us