sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

யோகி ஆதித்யநாத்திற்கு மிரட்டல்: ஐ.டி., பட்டதாரி பெண் கைது

/

யோகி ஆதித்யநாத்திற்கு மிரட்டல்: ஐ.டி., பட்டதாரி பெண் கைது

யோகி ஆதித்யநாத்திற்கு மிரட்டல்: ஐ.டி., பட்டதாரி பெண் கைது

யோகி ஆதித்யநாத்திற்கு மிரட்டல்: ஐ.டி., பட்டதாரி பெண் கைது

18


UPDATED : நவ 03, 2024 02:51 PM

ADDED : நவ 03, 2024 02:47 PM

Google News

UPDATED : நவ 03, 2024 02:51 PM ADDED : நவ 03, 2024 02:47 PM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த 24 வயதான ஐ.டி.,பட்டதாரி பெண்ணை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக பல்வேறு பிரபலங்களுக்கு மிரட்டல் விடுத்து மும்பை போலீசாருக்கு மிரட்டல் வந்து கொண்டு உள்ளது. அதில் ஒன்றாக பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக வட மாநிலத்தை சேர்ந்த சிலரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மும்பை போக்குவரத்து போலீசாருக்கு மிரட்டல் செய்தி ஒன்று வந்தது. அதில், '' உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் 10 நாட்களில் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால், மஹா., முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் போன்று கொலை செய்யப்படுவார்'' எனக்கூறப்பட்டு இருந்தது.

இதனையடுத்து மிரட்டல் விடுத்த எண்ணை வைத்து போலீசார் விசாரணையை துவக்கினர். அதில், இந்த மிரட்டலை விடுத்தது தானேயை சேர்ந்த பாத்திமா கான் என்ற பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையை தொடர்ந்து அவரை மும்பை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், 24 வயதான அந்த பெண் பி.எஸ்.சி., (ஐ.டி.,) படிப்பு முடித்துள்ளார். குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தந்தை மரவேலை தொடர்பான தொழிலில் ஈடுபட்டு உள்ளார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us