sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முதியவரிடம் 42 லட்சம் மோசடி செய்த மூவர் கைது

/

முதியவரிடம் 42 லட்சம் மோசடி செய்த மூவர் கைது

முதியவரிடம் 42 லட்சம் மோசடி செய்த மூவர் கைது

முதியவரிடம் 42 லட்சம் மோசடி செய்த மூவர் கைது


ADDED : அக் 08, 2025 12:21 AM

Google News

ADDED : அக் 08, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான, 80 வயது முதியவரிடம் 42 லட்சம் ரூபாய் மோசடி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுடில்லியில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான 80- வயது முதியவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய மூவர், அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் என தங்களை அறிமுகம் செய்துள்ளனர்.

மேலும், டிஜிட்டல் முறையில் அவரை கைது செய்துள்ளதாகவும் மிரட்டியுள்ளனர். இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்க பணம் அனுப்புமாறு மிரட்டி, 42.49 லட்சம் ரூபாயை பல்வேறு வங்கிக் கணக்குள் வாயிலாக பறித்துள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர், சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திர குமார் வைஷ்ணவ், 37, விஷால் குமார், 25, மற்றும் ஷியாம் தாஸ், 25, ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து காசோலை புத்தகங்கள், ஏ.டி.எம்., கார்டுகள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மூவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது .






      Dinamalar
      Follow us