sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வழக்கில் சிக்கிய போதை பொருளை மறைத்த மூன்று போலீசார் சஸ்பெண்ட்

/

வழக்கில் சிக்கிய போதை பொருளை மறைத்த மூன்று போலீசார் சஸ்பெண்ட்

வழக்கில் சிக்கிய போதை பொருளை மறைத்த மூன்று போலீசார் சஸ்பெண்ட்

வழக்கில் சிக்கிய போதை பொருளை மறைத்த மூன்று போலீசார் சஸ்பெண்ட்


ADDED : ஜூன் 15, 2025 09:24 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 09:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:டில்லியில், கொலை வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை மறைத்த மூன்று போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எஸ்.ஐ., இடமாற்றம் செய்யப்பட்டார்.

கடந்த 10ம் தேதி அதிகாலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த பிரகாஷ், 26, என்பவரை கத்தியால் குத்தி கொன்றதாக, அவரின் நண்பரான மிசோரம் மாநிலத்தை சேர்ந்த லால்ஹிரியாத்புயா, 23, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த படுகொலை தொடர்பாக கைதானவரின் மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை அடைவது தொடர்பாக நடந்த மோதலில், பிரகாஷ் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட, 2 கிராம் போதைப்பொருளை, கிஷான்கார் போலீஸ் நிலைய எஸ்.ஐ., வழக்கில் சேர்க்கவில்லை; கணக்கும் காண்பிக்கவில்லை.

இதுகுறித்து அறிந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், எஸ்.ஐ.,க்கு மூன்று போலீசாரும் உதவியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த மூன்று போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். போலீஸ் எஸ்.ஐ., இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள அந்த போலீஸ் எஸ்.ஐ., சில மாதங்களுக்கு முன், தன் உறவினரின் திருமணத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில், போலீஸ் சீருடையுடன் நடனமாடினார். அந்த வழக்கில் இருந்து பின் தப்பிய அவர், இப்போது போதைப்பொருளை மறைத்த குற்றத்திற்காக நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்.






      Dinamalar
      Follow us