sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

‛வயநாடு' தொகுதியை கலக்க வருகிறது திப்பு அரசியல்

/

‛வயநாடு' தொகுதியை கலக்க வருகிறது திப்பு அரசியல்

‛வயநாடு' தொகுதியை கலக்க வருகிறது திப்பு அரசியல்

‛வயநாடு' தொகுதியை கலக்க வருகிறது திப்பு அரசியல்

4


ADDED : ஏப் 11, 2024 10:29 PM

Google News

ADDED : ஏப் 11, 2024 10:29 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வயநாடு: வயநாடு தொகுதி எம்.பி.யாக நான் வெற்றி பெற்றால்இத்தொகுதியை சேர்ந்த சுல்தான் பத்தேரி நகரின் பெயரை மீண்டும் கணபதிவட்டம் என பெயர் மாற்றம் செய்வேன் என பா.ஜ., வேட்பாளராக போட்டியிடும் கேரள மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரன் தெரிவித்தார்.

கேரளா வயநாடு தொகுதியில் காங். வேட்பாளராக ராகுல், பா.ஜ., வேட்பாளராக சுரேந்திரன், கம்யூ., வேட்பாளராக ஆனி ராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால் இங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் பா.ஜ. வேட்பாளரான சுரேந்திரன் தெரிவித்துள்ளதாவது, வயநாடு தொகுதி எம்.பி.யாக என்னை வெற்றி பெற செய்தால் இத்தொகுதியை சேர்ந்த சுல்தான் பத்தேரி நகரின் முந்தைய பெயரான கணபதி வட்டம் என மீண்டும் பெயர் மாற்றம் செய்வேன்.

18-ம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட திப்புசுல்தான் 1798-ல் இங்கு வடக்கு கேரளாவின் மலபாரை கைப்பற்றி கணபதி வட்டம் பெயரை சுல்தான் பத்தேரி என பெயர் மாற்றினர். இங்கு கோட்டையும் கட்டப்பட்டுள்ளது.

என்னை வயநாடு எம்.பி.யாக வெற்றி பெற செய்தால் சுல்தான் பத்தேரி என்ற பெயரை நீக்கி விட்டு மீண்டும் முந்தைய பெயரான ‛கணபதி வட்டம்' என மாற்றம் செய்ய முன்னுரிமை அளிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கர்நாடகாவில் திப்புசுல்தான் பிறந்த நாளை கொண்டாட பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் காங்., கொண்டாட முனைந்தது. இந்த திப்பு அரசியல் கேரளாவின் வயநாடு தொகுதிக்கு பரவி வருகிறது.






      Dinamalar
      Follow us