sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சொந்த கட்சியிலும் மம்தாவுக்கு வலுக்குது எதிர்ப்பு; கொந்தளித்த எம்.பி., ராஜினாமா!

/

சொந்த கட்சியிலும் மம்தாவுக்கு வலுக்குது எதிர்ப்பு; கொந்தளித்த எம்.பி., ராஜினாமா!

சொந்த கட்சியிலும் மம்தாவுக்கு வலுக்குது எதிர்ப்பு; கொந்தளித்த எம்.பி., ராஜினாமா!

சொந்த கட்சியிலும் மம்தாவுக்கு வலுக்குது எதிர்ப்பு; கொந்தளித்த எம்.பி., ராஜினாமா!

8


UPDATED : செப் 08, 2024 01:10 PM

ADDED : செப் 08, 2024 12:58 PM

Google News

UPDATED : செப் 08, 2024 01:10 PM ADDED : செப் 08, 2024 12:58 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: கோல்கட்டா அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மாநில அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து ஆளும் திரிணமுல் கட்சியில் இருந்து ராஜ்யசபா எம்.பி., ஜவஹர் சர்கார் ராஜினாமா செய்தார்.

மேற்குவங்கத்தின் கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. டாக்டர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் நீதி கேட்டு சாலையில் நின்று போராடும் நிலை ஏற்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே மேற்குவங்க அரசு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் மவுனம் சாதித்து வருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

நம்பிக்கை போய்விட்டது!

இந்நிலையில், இன்று(செப்.,08) ஆளும் திரிணமுல் கட்சி ராஜ்யசபா எம்.பி., ஜவஹர் சர்கார் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: ஊழல் அதிகாரிகள் அரசு மருத்துவமனைகளில் உயர் பதவிகளை பெறுவதை என்னால் ஏற்று கொள்ள முடியாது. மேற்குவங்க அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. எனது அனுபவத்தில் இது போன்ற சம்பவத்தை நான் பார்த்தது இல்லை.

நடவடிக்கை தாமதம்

ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் நடந்த பயங்கரமான சம்பவத்தில் இருந்து ஒரு மாதம் காலமாக நான் பொறுமையாக இருந்தேன். மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மம்தாவின் பழைய பாணியில் அவர் நேரடி தலையீட்டு நடவடிக்கை எடுப்பார் எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை. அரசு தாமதமாக தான் நடவடிக்கை எடுக்கிறது. இது தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி உடன் தனிப்பட்ட முறையில் பேச முயற்சி செய்தேன். அதுவும் நடக்கவில்லை. 3 ஆண்டுகளாக மேற்குவங்க மாநில மக்கள் பிரச்னைகள் குறித்து பார்லிமென்டில் எழுப்ப நீங்கள் எனக்கு அளித்த வாய்ப்பிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

வகுப்புவாத சக்தி

நான் எம்.பி.,யாக தொடர விரும்பவில்லை. மத்திய மற்றும் மாநிலங்களில் ஊழல், வகுப்புவாதம் மற்றும் எதேச்சதிகாரத்தை எதிர்த்து போராட எனது பதவியை அர்ப்பணிக்கிறேன். திரிணமுல் காங்கிரஸ், மோதல் இல்லாத மாநிலத்தை உருவாக்காவிட்டால் வகுப்புவாத சக்திகள் கைப்பற்றி விடும். நான் விரைவில் டில்லி சென்று ராஜ்யசபா தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிவிட்டு, அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us