sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்றைய போர்களை வெற்றி கொள்ள நாளைய தொழில்நுட்பம் தேவை; முப்படை தலைமை தளபதி சவுகான் பேச்சு

/

இன்றைய போர்களை வெற்றி கொள்ள நாளைய தொழில்நுட்பம் தேவை; முப்படை தலைமை தளபதி சவுகான் பேச்சு

இன்றைய போர்களை வெற்றி கொள்ள நாளைய தொழில்நுட்பம் தேவை; முப்படை தலைமை தளபதி சவுகான் பேச்சு

இன்றைய போர்களை வெற்றி கொள்ள நாளைய தொழில்நுட்பம் தேவை; முப்படை தலைமை தளபதி சவுகான் பேச்சு

3


UPDATED : ஜூலை 16, 2025 05:44 PM

ADDED : ஜூலை 16, 2025 05:04 PM

Google News

UPDATED : ஜூலை 16, 2025 05:44 PM ADDED : ஜூலை 16, 2025 05:04 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'இன்றைய போர்களை வெற்றி கொள்ள நாளைய தொழில்நுட்பம் தேவை' என முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

டில்லியில், நடந்த பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சியில், அனில் சவுகான் பேசியதாவது: நேற்றைய ஆயுதங்களால் இன்றைய போர்களை வெல்ல முடியாது. இன்றைய போர்களை எதிர்த்துப் போராட நாளைய தொழில்நுட்பம் தேவை.

ட்ரோன் தொழில்நுட்பங்கள்

காலாவதியான ஆயுதங்களைக் கொண்டு இந்தியா நவீன போர்களை எதிர்கொள்ள முடியாது.மே 10ம் தேதி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கியபோது, பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் வெடிமருந்துகளைப் பயன்படுத்தியது. அவற்றில் எதுவும் இந்திய ராணுவத்திற்கோ அல்லது சிவில் உள்கட்டமைப்பிற்கோ எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. ட்ரோன் தொழில்நுட்பங்களை உருவாக்குவது மிகவும் அவசியம்.

புரட்சிகரமானது

நாம் ட்ரோன்களைப் பற்றிப் பேசும்போது, இவை என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.போரில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவருகிறதா? என்று கேள்வி கேட்கிறீர்கள். அவற்றின் செயல்பாடுகள் மிகவும் புரட்சிகரமானது என்றும் நான் நினைக்கிறேன். பரிணாம மாற்றங்கள், போர் சண்டை உபகரணங்களை சிறியதாகவும், வேகமாகவும், இலகுவாகவும், திறமையாகவும், மலிவு விலையிலும் ஆக்கியுள்ளன. இவ்வாறு அனில் சவுகான் பேசினார்.






      Dinamalar
      Follow us