இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளைத் தரும் வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி
இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளைத் தரும் வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி
ADDED : ஜன 28, 2026 11:02 PM

புதுடில்லி: இந்தியா ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், தன்னிறைவு இந்தியா திட்டத்துக்கு வேகம் அளிப்பதுடன், இந்தியாவில் தயாரிப்போம், உலகத்துக்காக தயாரிப்போம் தீர்மானத்தை பலப்படுத்தி இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை அளிக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டில்லியில் என்சிசி ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: ஒப்பந்தங்களின் தாய் என அழைக்கப்படும் இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை உலக நாடுகள் பாராட்டுகின்றன. இந்த ஒப்பந்தம் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும், உலகத்துக்கும் கேம் சேஞ்சர் ஆகி உள்ளது. சினிமா , விளையாட்டு, பேஷன், டிஜிட்டல் உள்ளடக்கம், இசை மற்றும் டிசைனிங் உள்ளடக்கிய பொருளாதாரத்தை உருவாக்கி பலன் அளிக்கும்.
இளைஞர்கள்,ஆராய்ச்சி மற்றும் கல்வி, ஐடி உள்ளிட்ட துறைகளை சேர்ந்தவர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளை அளிக்கும். இந்திய இளைஞர்களை உலகம் நம்பிக்கையுடன் பார்க்கின்றன. இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்க அரசு பணியாற்றி வருகிறது. ஐரோப்பிய யூனியன், யுஏஇ, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன், மொரிஷியல் உள்ளிட்ட நாடுகளுடன் செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளை திறக்கப் போகின்றன.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

