மேற்கு வங்கத்தில் சோகம்; தானிய கிடங்கில் தீ விபத்து: 8 பேர் உடல் கருகி பலி
மேற்கு வங்கத்தில் சோகம்; தானிய கிடங்கில் தீ விபத்து: 8 பேர் உடல் கருகி பலி
ADDED : ஜன 27, 2026 10:07 PM

கொல்கட்டா: மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு தானியக் கிடங்குகளில் ஏற்பட்ட தீ விபத்தில், எட்டு பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கட்டாவின் புறநகர் பகுதியான தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்த நஜிரபாதில், அடுத்தடுத்து இரு தானியக் கிடங்குகள் உள்ளன. இங்கு நேற்று திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது.
இது பற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள், 12 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் 7 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் இரு கட்டடங்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
தீயில் சிக்கி உயிரிழந்த உடல்கள் நேற்று இரவு முதல் மீட்கப்பட்டன. 24 மணி நேரம் கடந்த பின்னுன் தீ முற்றிலும் தணியவில்லை. இதுவரை எட்டு பேர் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன. மேலும் சிலர் மாயமாகி இருப்பதால், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

