sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மனைவி அஸ்தியை கரைக்க வந்தவர் பலியான சோகம்

/

மனைவி அஸ்தியை கரைக்க வந்தவர் பலியான சோகம்

மனைவி அஸ்தியை கரைக்க வந்தவர் பலியான சோகம்

மனைவி அஸ்தியை கரைக்க வந்தவர் பலியான சோகம்

1


ADDED : ஜூன் 14, 2025 02:02 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 02:02 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமதாபாத் : குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த அர்ஜுன் மனுபாய் படோலியா, 36, என்பவர், பிரிட்டனின் லண்டனில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி பாரதிபென், சமீபத்தில் லண்டனில் உயிரிழந்தார்.

இவரது அஸ்தியை நர்மதா நதியில் கரைக்க, அம்ரேலி மாவட்டத்தில் உள்ள மூதாதையர் கிராமமான வாடியாவுக்கு அர்ஜுன் மனுபாய் படோலியா வந்தார்.

மனைவியின் இறுதி ஆசைப்படி, அஸ்தியை நர்மதா நதியில் கரைத்த அர்ஜுன் மனுபாய் படோலியா, லண்டனுக்கு செல்ல நேற்று முன்தினம் ஆமதாபாத் விமான நிலையத்தில், 'ஏர் - இந்தியா' விமானத்தில் பயணம் செய்தார். விமானம் விபத்துக்குள்ளானதில், அவர் உயிரிழந்தார். அவருக்கு 4 மற்றும் 8 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர்.

'ஏர் - இந்தியா' விமானம் விழுந்து நொறுங்கிய பி.ஜே.மருத்துவக் கல்லுாரி விடுதி கேன்டீனில் மதிய உணவு சாப்பிட்ட ஐந்து மாணவர்கள் உயிரிழந்தனர். விபத்தின் போது விடுதியில் உள்ள கேன்டீனில் இருந்த தாய், மகளை காணவில்லை என, அங்கு பணிபுரியும் ரவி தாக்குர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ''கேன்டீனில் நானும், என் மனைவியும், அம்மாவும் வேலை செய்கிறோம். விபத்து நடந்த போது, அம்மாவுடன் என் மகளும் இருந்தார். அவர்களின் நிலை என்னவானது என இதுவரை தெரியவில்லை. அதிகாரிகளும் சரியாக பதிலளிக்கவில்லை,'' என்றார்.






      Dinamalar
      Follow us