உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 10, 2026 02:29 AM

அ நிறம் | அளவு
பாட்னா: பீஹாரின் தெஹ்தா மற்றும் ஜெஹனாபாத் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள வழிதடத்தில், இருப்புப் பாதைக்கு மேலே செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகளை, மர்ம நபர்கள் நேற்று அதிகாலை வெட்டிச் சென்றனர்.
இந்த துணிகர சம்பவத்தால், சிக்னல்கள் செயலிழந்தன. கயாவில் இருந்து பாட்னா நோக்கி சென்ற பல ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால், பயணியர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தகவல் அறிந்து அங்கு வந்த ரயில்வே தொழில்நுட்பக் குழுவினர், போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு மின் கம்பிகளை இணைத்து சிக்னல்களை சரிசெய்தனர். அதன் பிறகே அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து மீண்டும் சீரானது.
