sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது ஆட்டத்தை ஆரம்பித்தார் டிரம்ப்

/

சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது ஆட்டத்தை ஆரம்பித்தார் டிரம்ப்

சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது ஆட்டத்தை ஆரம்பித்தார் டிரம்ப்

சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது ஆட்டத்தை ஆரம்பித்தார் டிரம்ப்

1


ADDED : ஜன 24, 2025 11:44 PM

Google News

ADDED : ஜன 24, 2025 11:44 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றவுடன், அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை உடனடியாக துவக்கினார்.

மெக்சிகோ எல்லையில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதுடன், அங்கு தீவிர கண்காணிப்பை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள், தென் அமெரிக்க நாடான, வெனிசுலாவை சேர்ந்த, 'ட்ரென் டி அரகுவா' தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 4 பேர், சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்து தண்டனை பெற்றவர்கள் உட்பட, சட்ட விரோதமாக குடியேறிய, 538 பேரை டிரம்ப் நிர்வாகம் கைது செய்துள்ளது.

மேலும், நுாற்றுக்கும் மேற்பட்டோரை ராணுவ விமானம் வாயிலாக நாடு கடத்தி உள்ளது.

அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவிலான நாடு கடத்தும் நடவடிக்கை துரிதமாக நடந்து வருகிறது. அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

பாஸ்போர்ட்கள் முடக்கம்

டிரம்ப் பதவி ஏற்றதும், ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் என்றும், மூன்றாம் பாலினத்துக்கு அங்கீகாரம் கிடையாது என்றும் அறிவிப்பை வெளியிட்டார். இதற்கான நடவடிக்கைகளையும் அந்நாட்டு அரசு துவங்கியுள்ளது.மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட்களில், அவர்கள் பாலினம் மாறியவர்கள் என்பதை குறிக்கும் வகையில், 'எக்ஸ்' குறியீடு போடும் வழக்கம், 2022ல் அறிமுகமானது. இந்நிலையில், 'எக்ஸ்' குறியீடு போடப்பட்டுள்ள பாஸ்போர்ட்களை அமெரிக்க வெளியுறவுத்துறை அதிரடியாக முடக்கி உள்ளது. மேலும், 'எக்ஸ்' குறியீடு கேட்டு வந்துள்ள விண்ணப்பங்கள், 'எக்ஸ்' குறியீட்டை நீக்கக்கோரும் மனுக்களையும் ரத்து செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us