sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானை துருக்கி வலியுறுத்த வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்

/

பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானை துருக்கி வலியுறுத்த வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்

பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானை துருக்கி வலியுறுத்த வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்

பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானை துருக்கி வலியுறுத்த வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்

1


UPDATED : மே 23, 2025 10:32 AM

ADDED : மே 22, 2025 09:00 PM

Google News

UPDATED : மே 23, 2025 10:32 AM ADDED : மே 22, 2025 09:00 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: '' பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதத்தை ஒழிக்கவும், ஆதரவு அளிப்பதை நிறுத்தவும் அந்நாட்டை துருக்கி வலியுறுத்தும் என எதிர்பார்க்கிறோம்,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

டில்லியில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த ஆப்கன் வெளியுறவு அமைச்சருக்கு, நமது அமைச்சர் நன்றி தெரிவித்து உள்ளார். தவறான குற்றச்சாட்டுகள் மூலம் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான உறவை கெடுக்க முயன்ற சதி முறியடிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கமளிக்க ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் 3 குழுக்கள் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர். இது அரசியல் இயக்கம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நமது தீர்மானத்தை உலகத்திடம் வலிமையாக தெரிவிக்க விரும்புகிறோம். அனைத்து வடிவங்களிலும், உருவங்களிலும் வரும் பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்று திரள வேண்டும். இந்தியாவிற்கு எதிராக கடந்த 40 ஆண்டுகளாக பயங்கரவாதிகளை ஆதரித்து பாகிஸ்தான் ஊக்குவித்து வருகிறது. இந்தியாவிற்கு எதிராக நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இந்தியா பாகிஸ்தான் இடையிலான பிரச்னை இரு தரப்பு ரீதியிலானது என்பதில் உறுதி உடன் உள்ளோம். பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரு சேர நடக்காது என்பதில் உறுதியாக உள்ளோம். பயங்கரவாதத்தை பொறுத்தவரை, எங்களிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியலை பாகிஸ்தானிடம் அளித்தோம். அவர்களை ஒப்படைக்க வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் தொடரும்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதை நிறுத்தவும், பல தசாப்தங்களாக அது வளர்த்து வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டை துருக்கி வலுவாக வலியுறுத்தும் என எதிர்பார்க்கிறோம்.

நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன் கடந்த 10ம் தேதி ஆலோசனை நடத்தினார். அப்போது, பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை அஜித் தோவல் எடுத்துக் கூறினார். இந்தியா சீனா இடையிலான உறவானது, பரஸ்பர நம்பிக்கை, மரியாதை அடிப்படையில் அமைந்துள்ளது என்பதை அந்நாடு உணர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us