sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜோதிடர் கொலையில் இருவருக்கு ஆயுள்

/

ஜோதிடர் கொலையில் இருவருக்கு ஆயுள்

ஜோதிடர் கொலையில் இருவருக்கு ஆயுள்

ஜோதிடர் கொலையில் இருவருக்கு ஆயுள்


ADDED : பிப் 02, 2025 02:19 AM

Google News

ADDED : பிப் 02, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:கேரளா, மூணாறு அருகே மறையூர் பாபுநகரைச் சேர்ந்தவர் ஜோதிடர் மாரியப்பன், 70. இவர் 2020 பிப்.,23ல் ஜோதிடம் தொடர்பாக தமிழகம் சென்று விட்டு திரும்பினார். அன்றிரவு பாபுநகரில் தனியாக வசித்த அன்பழகன் 69, வீட்டில் தங்கினார்.

அங்கு எருமேலி சாந்திபுரத்தைச் சேர்ந்த மிதுன் 30, உடனிருந்தார். இரவில் மூவரும் மது அருந்திய நிலையில் போதையில் தகராறில் ஈடுபட்டனர். அப்போது மிதுன், அன்பழகன் ஆகியோர் மாரியப்பனை பலமாக தாக்கியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்து உடலை சாக்கு மூடையில் கட்டி அருகில் உள்ள ஓடையில் வீசினர்.

அந்த வழியாக பிப்., 24 காலை சென்றவர்கள் இதை கவனித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். மறையூர் போலீசார் விசாரித்து மிதுன், அன்பழகனை கைது செய்தனர். தொடுபுழா மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் மிதுன், அன்பழகனுக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சசிகுமார் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us