ADDED : அக் 05, 2025 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: மஹாராஷ்டிராவில், ஊழல் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில், இரு நீதிபதிகளை பணிநீக்கம் செய்து, மும்பை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த கீழமை நீதிமன்றத்தின் நீதிபதியாக பணிபுரிந்தவர் தனஞ்செய் நிகாம்.
ஜாமின் வழக்கு ஒன்றில் இவர் 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் தனஞ்செய் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதேபோல், மும்பையைச் சேர்ந்த சிவில் நீதிபதி இர்பான் ஷேக், போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த இரு வழக்குகளை விசாரித்த, மும்பை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் இருவரையும் பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டது.