sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மின் கம்பி மீது உரசிய பஸ்; ராஜஸ்தானில் இருவர் பலி

/

மின் கம்பி மீது உரசிய பஸ்; ராஜஸ்தானில் இருவர் பலி

மின் கம்பி மீது உரசிய பஸ்; ராஜஸ்தானில் இருவர் பலி

மின் கம்பி மீது உரசிய பஸ்; ராஜஸ்தானில் இருவர் பலி


ADDED : அக் 29, 2025 02:48 AM

Google News

ADDED : அக் 29, 2025 02:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெய்ப்பூர்: உத்தர பிரதேசத்தின் பிலிபிட் பகுதியில் இருந்து தனியார் பஸ் ஒன்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள செங்கல் சூளைக்கு, 50 தொழிலாளர்களை ஏற்றி சென்றது.

அந்த பஸ்சின் மேல் சைக்கிள், காஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பஸ் ஜெய்ப்பூர் அருகே மனோகர்பூர் கிராம சாலையில் சென்றபோது மேலே சென்ற உயர் அழுத்த மின் ஒயர் திடீரென உரசியதில் பஸ் தீப் பிடித்தது. இதில் பஸ் மீது வைக்கப்பட்டிருந்த காஸ் சிலிண்டர்கள் தீப்பிடித்து வெடித்தன.

இதனா ல் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் பஸ்சில் இருந்து குதித்து தப்பினர். எனினும் இரு தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்; 10 பேர் காயமடைந்தனர்.






      Dinamalar
      Follow us